27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூலவர்கள் என்றால் அதில் நிச்சயமாக தோழர் ஐயாவிற்கும் தனி இடம் உண்டு. வாழ்நிலை கம்யூனிஸ்ட் என்று எம்மால் உணரப்படும் அளவிற்கு அடிமட்ட மக்களின் வேலைத்திட்டங்களில் தன்னை எப்போதும் இணைத்தவர் வன்னியின் காடு மேடு எல்லாம் இவருக்கு அத்துப்படி வாழ்வை இவர் அளவிற்கு ரசிப்பவர் வேறுயாராகவும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அதனால்தான் மக்களின் விடுதலைக்காக ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே கல்யாணத்தின் பின்பும் முழுநேர போராளியாக தன்னை இணைத்துக் கொண்டவர். இவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவராக மக்களால் இனம்காணும் வகையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பின்நின்று வழிநடத்தியவர் மத்திய குழு உறுப்பினர் நடேசலிங்கம் அரசியல் செயற்பாடாளர் கனகலிங்கத்தின் மரணத்தின் பின்பு வன்னியை தனித்து தாங்கப் புறப்பட்டு றேகன் என்ற சர்வதேச பாசறை போராளியை இனம்காட்டியவர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியல் குடியேறிய மலையக மக்கள் மத்தியிலிருந்து வந்து தோழர்கள் விடுதலைக்காக செய்த அர்பணிப்கபுக்ள் அளப்பரியவை கூடவே முஸ்லீம்மக்கள் மத்தியிலும் அதிகளவு போராளிகளை உள்வாங்கிய செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்திலும் அதிகம் நடைபெற்றது. 1986 களில் சிறீலங்கா இராணுவத்துடனான சமரில் முதல்களப் பலி கண்ட வன்னி மகள் பானு. கருவிகளை உருவாக்கும் பட்டறையில் கருவிகளைச் செதுக்கிய சிற்பி தாஸ் இப்படி பலரையும் குறிப்பிடலாம் வன்னியிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை பெற வவுனியாதோழர்களின் அர்பணிப்புகள் காரணமாக இருந்தன. இணைந்த மாகாண சபை ஆடசிக்காலத்தில் வவுனியாவில் முகுந்தன் ஐயா வெற்றி என பல ஆளுமைகள் ஒருகிணைந்து இங்கு செயற்பட்டார்கள் இவர்களுடன் தோழர் பிரதாப் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்காக அரச நிர்வாகத்தில் திறம்பட செயற்பட்டார்.

தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு?

தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்து உள்ளார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவும், முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளராகவும், இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் உயர் மட்ட குழு அங்கத்தவராகவும் பதவிகள் வகித்த எஸ். எம். இஸ்ஸடீன்.

(“தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாத உமக்கு தலைவர் பதவி எதற்கு?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!

(ரி. தர்மேந்திரன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய இரகசிய ஆவணங்கள் பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன, அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ. யூ. எல். எம். ஹாரிஸ் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுவிஸில் இருந்து தாயகம் திரும்பி வந்த இவரை நாம் நேர்காணல் கண்டபோது…..

(“தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்

(எம். காசிநாதன்)

“மாட்டிறைச்சிக்கு, மாடுகளை சந்தையில் விற்கக்கூடாது” என்று கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாண்டு நிறைவு விழாக் கொண்டாடும் நேரத்தில், எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, அக்கட்சியின் சாதனைப் பிரசாரங்களைத் திசைதிருப்பியிருக்கிறது.

(“மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

எல்லாப் போராட்ட அமைப்புக்களின் ஆரம்ப புள்ளியாக இருப்பது யாழ் மாவட்டம் என்பது நிதர்சனமான உண்மை இதில் விதி விலக்காக பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் உம் இருந்தது என்பது உண்மையே. ஆனால் இதன் தொடர்சியாக யாழ் மையவாத மேலாதிக்கம் ஈழவிடுதலை அமைப்புக்களுக்குள்ளேயும் மிதவாத தமிழ் அரசியலில் தலமைகளுக்குள் இன்றுவரை நிலவி வருகின்றது. இதிலிருந்து வேறுபடுவது பத்மநாபா தலமையில் உருவான விடுதலை அமைப்பு இதன் தொடர்சியான பயணப் போக்கில் இன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர். யாழ்மையவாத மேலாதிகமற்ற சகல பிரதேசங்களின் சமத்துவத்தையும் பிரதி பலிக்கும் செயற்பாடுகளை தன்னத்தே கொண்டிருப்பது இதன் அடிப்படையில் செயற்படுவதும் இக்கட்சியின் சிறப்பு. 26 வது தியாகிகள் தினம் கடந்த வருடம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கூடவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் தல நகரத்தை பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் திருகோணமலையில் நிறுவியது தனிச்சிறப்பு.

(“27 வது தியாகிகள் தினம் உலகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

சாதாரணமானவனின் மனது

சஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்
ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி அரசியலுக்குள் சிக்கிவிட்ட தேசியம் பேசும் அமைப்புக்கள்

நோர்வே ஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் மக்களவை உருவாக்க காலத்தில் முக்கியப்படுத்தப்பட்டவரும், ரீரீசியின் உபஅமைப்பான நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் தலைவர், பல்வைத்தியர் சிவகணேசன் அவர்களும் ஸ்ரீலங்கா அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி சில வாரங்களே ஆகும்போது பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களைத் தலைவராகக்கொண்ட நோர்வே ஈழத்தமிழர்அவை திடீரென நோர்வே ஈழமக்கள் அவைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக அறிவித்துள்ளது.

(“சாதாரணமானவனின் மனது” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்

2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

(“இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)

இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான இலண்டனின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2 தாக்குதல்களில், 6 பேர் கொல்லப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவிர, தாக்குதல்களை மேற்கொண்ட 3 பேரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:38 மணிக்கு (ஐ.இராச்சிய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10:08) ஆரம்பித்துள்ளன.

(“இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 15)

(அருண் நடேசன்)

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடுசவக்களை என்று சொல்வார்களேஇராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

(“மே 18 (பகுதி 15)” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிப் போராளிகளின் பங்களிப்பு சற்று மிகையானது என்றால்  அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாக இருக்கும் சிறப்பாக பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இன் அதிக பலமே கிழக்கு போராளிகளின் அர்பணிப்பில் உருவானது. மற்றய பிராந்தியங்களைவிட கிழக்கு பிராந்திய மக்களும் இந்த அமைப்புடன் ஒரு நெருங்கிய உறவை பேணிவந்தனர். தோழர்கள் பாஸ்கரன் தேவகுமார் இருவரது வெலிக்கடைப் சிறைப்படுகொலைக்கு பிறகு மட்டக்களப்பு சிறையுடைபாக இருக்கட்டும் இதனைத் தொடர்ந்த தோழர் குமார், சிவா ஆகியோரின் தலமைத்துவத்துடனான செயற்பாடாக இருக்கட்டும் காரை நகர் கடற்படை முகாம் தகர்பாக இருக்கட்டும் தோழர்கள் வேலு கணேஸ் ஆகியோரின் அர்பணிப்பாக இருக்கட்டும்  இதே வேளை விசேட அதிரடிப்படையின் நெருக்குவாரங்களுக்கிடையில் தோழர் நிதி, தைரி போன்றவர்களின் செயற்பாடு தோழர் வெள்ளையன் (கிருபா) ஆகியோரின் திருமலை மட்டக்களப்பு செயற்பாடு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

(“27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)