சிரியா: பேரரங்கின் சிறுதுளி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போர் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை. அது சிக்கல்களுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கிறது. போர்கள் தொடுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்கள், பெரும்பாலும் தொடுக்கப்பட்ட போருக்கான உண்மையான காரணமாக இருப்பதில்லை. இதை வரலாறெங்கும் கண்டு வந்திருக்கிறோம். அதன் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.

(“சிரியா: பேரரங்கின் சிறுதுளி” தொடர்ந்து வாசிக்க…)

அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்

(Gopikrishna Kanagalingam)
திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரியர்கள் அபாயா எனப்படும், இஸ்லாமிய உடையை அணிவது தொடர்பில், அண்மைக்காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இது, சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

(“அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரியர் அபாயா அணியலாம்

இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் ? தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ?

(“ஆசிரியர் அபாயா அணியலாம்” தொடர்ந்து வாசிக்க…)

‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’

உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் (முடிந்தவரை அதிகமானவர்களிடம் கொண்டு சேருங்கள்.)
*********************************************************

“ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன… நான் உண்மையாகவே குற்றவாளியா…?”

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…!

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…

(“‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’” தொடர்ந்து வாசிக்க…)

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ‘டவுன் பஸ்’ படத்தில் கலக்கிய இசைக்குயில் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.

(“பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதுக்காக, குறித்த வழக்குகள் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

(“3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பில் கலந்துகொண்ட ஜெகதீஸ்வரன் அனித்தா 3.55 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளார். தான் 3.48 மீற்றர் உயரத்தை முன்னர் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தாண்டி சாதனை படைத்தையே அனித்தா தற்போது முறியடித்துள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், கூட்டணி வைக்காமல் தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியைத் தழுவும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 12-ம் தேதி தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும்ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. அதேபோல எதிர்க்கட்சியான பாஜகவும் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

(“கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.

(“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

(“விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?” தொடர்ந்து வாசிக்க…)