’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு

“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்துமாறு கோரியமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 24 வருடங்கள், இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டை அவரது தாய் ஒருமுறையேனும் நேரடியாக பார்த்திராத நிலையில், தனது இறுதி டெஸ்ட் போட்டியினை தனது தாய் இரசிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த போட்டியை மும்பையில் நடத்தக்கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

(“’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு” தொடர்ந்து வாசிக்க…)

முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?

தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிக…ள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…

(“முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” தொடர்ந்து வாசிக்க…)

இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்

இரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

(“இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்

(எம். காசிநாதன்)
“தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும்” என்று போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது, “என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” என்று குற்றம் சாட்டி, “ஆளுநரை திரும்பப் பெறுங்கள்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(“இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முகிழ்ப்பு

– அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி பெருமிதம்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன, அவர்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை அடையாளம் கண்டு ஏற்று அங்கீகரித்து உள்ளனர் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி தெரிவித்தார்.

(“முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் முகிழ்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

குறிப்பால் உணர்த்தல்

(மொஹமட் பாதுஷா)
அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது.

(“குறிப்பால் உணர்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்

கடந்த ஐந்தாறு வருடங்களுக்குள் புலம்பெயர்ந்த மண்ணில் மிகப்பிரபலமாக வளர்ச்சியடைந்திருக்கும் துறை, ஊரிலுள்ள பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள். அந்த பாடசாலைகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் திடீரென்று தங்கள் பாடசாலைகளின் மீது காதல் கொண்டு பூமியை பிளந்துகொண்டு எழுந்திருக்கும் அந்த காட்சி புல்லரிக்கவைப்பவை. சொல்லப்போனால், இந்த பழைய மாணவர் சங்கங்கள் அரசியல் கட்சிகளைவிட பலம்வாய்ந்த தரப்புக்களாக – ஆளணியும் – பணபலமும் பொருந்திய அமைப்புக்களாக – கடந்த சில வருடங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஊரில் சில விடயங்களை செய்வதற்கு இந்த பழைய மாணவர் சங்கங்களை அணுகினால்தான் அது நடக்கும் என்கின்ற வரையிலான கட்டப்பஞ்சாயத்து ரேஞ்சுக்குக்கூட ஒரு சில அமைப்புக்கள் எழுச்சியடைந்திருப்பது வேறுகதை.

(“புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்

என்.ஈ.பி.எல் என்று அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பது உலகம் முழதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும், உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டெழ நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தின் இன்னொரு மைற்கல் இதுவாகும்.

(“வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி லோயா மரணம்:  லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை

ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் வருகின்றன. இது போலி என்கவுன்டர் எனப் பின்னர் அறியவந்தபோது அதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா எனக் குற்றச்சாட்டு எழுகிறது. அது குஜராத்தில் மோடி ஆட்சியில் பல போலி என்கவுன்டர் கொலைகள் நடந்து கொண்டிருந்த காலம். அந்தப் போலி என்கவுன்டர்களைச் செய்த IPS அதிகாரிகள் (வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் etc) பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அப்படியான வழக்குகளில் ஒன்றுதான் மோடியில் வலது கரமான அமித்ஷா மீதான இந்தக் கொலை வழக்கும்.

(“நீதிபதி லோயா மரணம்:  லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை” தொடர்ந்து வாசிக்க…)

சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி

Dharani Akil அவர்களின் பதிவிற்கு பதிலளிக்க முயன்றேன். நீண்டதானாலோ, வேறு காரணத்தினாலோ பதிவேற்ற முடியாததால் இங்கு பதிவு செய்கிறேன்.

நியாயமான கருத்துக்கள் அடியுண்டு போய்விடாமல் இருக்கவும், பிழையான விளக்கங்களைத் தவிர்ப்பதற்கும், Dharani உங்கள் பதிவிற்கு சில மாற்றுக் கருத்துக்களை பகிர வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.

(“சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி” தொடர்ந்து வாசிக்க…)