ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடையவர் இந்தியாவில் கைது

இந்தியா – கேரளா மாநிலத்தில் தற்கொலை தாக்குதல்தாரியொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், இலங்கையில் கடந்த நாளில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவரான, ஸஹ்ரான் ஷமீம் உடன் நெருங்கிய தொடர்புடையவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ரியாஸ் அபூபக்கர் எனப்படும் 29 வயதுடையவராவார். அத்துடன் கேரளாவில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமா, என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

இலங்கையில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இன்று காலை ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 நாடுகள் இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும், 16 நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலா செல்வது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.