இலங்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் (பாகம் 1)

(சாகரன்)

கொஞ்சம் அரசியல் பேசிப் பார்க்கலாம் என்று இந்த பதிவை இடுகின்றேன் இதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு. அது பதிவின் முடிவில் தெரிய வரும். இலங்கை அரசியலை பேச விளைகின்றேன். இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறப் போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த பதிவை தொடர்கின்றேன்.
இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு, பின்பு இதற்குள் பாராளுமன்ற அகிம்சைப் போராட் வழிமுறைக்காலம், ஆயுதப் போராட்ட காலம், ஆயுதங்கள் மௌனிகப்பட்ட காலம் என்று இலங்கை அரசியலைப் பிரித்துப்பார்த்தல் நலம் என்று எண்ணுகின்றேன்.

சுருங்கும் ஜனநாயக இடைவெளி

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் அவதானிப்பைப் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும், ஒரு விடயத்தை மிகத் தெளிவாகச் சுட்டி நிற்கிறது. இலங்கை, மெதுமெதுவாகத் தனது ஜனநாயக இடைவெளியை இழந்து வருகிறது. இப்போதைய கொவிட் 19 பெருந்தொற்று, அதற்கு வாய்ப்பாகியுள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் அச்சத்தை விதைக்கின்றன. மறுபுறம், இலங்கையின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

இந்திய – சீன எல்லை நெருக்கடி; சொந்த செலவில் சூனியம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நெருக்கடியான காலகட்டங்களில் திசை திருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல், திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற வினாக்களுக்கு மௌனத்தை மட்டுமே பரிசளிக்கின்றன. அந்த மௌனம் சொல்லும் செய்தி வலுவானது. வினாக்களுக்கான விடைகள் அந்த மௌனத்திலேயே ஒளிந்திருக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு

(Maniam Shanmugam)
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைய வேண்டும் என்பது வடக்கு வாழ் தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும். ஆனால் அந்தக் கோரிக்கை 1975ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசினால்தான் நிiவேற்றி வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தில் ஒரு அணிலைப் போல ஒரு சிறு துரும்பை என்னாலும் தூக்கிப்போட முடிந்தமைக்காக பெருமைப்படுகின்றேன்.

வருத்தம் தெரிவின்றோம்

சதாசிவம் ஜீவா என்பவரின் பதிவான ‘சேந்தன்’ என்ற தலைப்பிடப்பட்டு ஜுன் 15, 2020 இல் சூத்திரத்தில் வெளியான கட்டுரையில் பாவிக்கப்பட்ட விடயங்கள் சிலவற்றில் தனிப்பட முறையில் ஒருவரைப் பற்றிய விடயதானம் ஊடக தர்மத்திற்கு முரணாக இருப்பதாக ஆசிரியர் குழுவிற்கு எனது இணையத்தின் வாசகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்பகுதியை நீக்கியுள்ளோம். மேலும் இந்த தவறிற்காக வருந்துகின்றோம். – ஆசிரியர் குழு

இந்திய சீன மோதல்…

ஒட்டுமொத்த உலகமே நோய்த்தொற்றில் சிக்கித்தவிக்கிறது. இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இந்திய ராணுவம் சீனாவை எதிர்த்துப்போர் புரிய நிர்பந்தப்படுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர் வீரகத்தி சேந்தன் நினைவாக:

வெற்றிடம் நிச்சயம் நிரப்பப்படும்!

கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி சேந்தன் அவர்களின் உயிர் இரண்டு நாட்களுக்கு முன்னர் – யூன் 12ஆம் திகதி – அவரது உடலை விட்டுச் சென்றுவிட்டது. பூதவுடலும் இரண்டொரு நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். இது நம் எல்லோருக்கும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நிகழ்வுதான்.

தன் வாழ்வால் எங்களுக்கு வழிகாட்டியவர் றொபேட்

(தோழர் மோகன்)

தோழர் றொபேட் ( தம்பிராசா சுபத்திரன்) சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல், சமூக பிரச்சினைகளில் பிரக்ஞை கொண்டு செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக 23 வருடங்கள் தொடர்ச்சியாக அவர் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் முன்னணியிலிருந்து கருமமாற்றியவர். அவரது 17வது நினைவு தினம் இன்றாகும்.

சேந்தன்.

சேந்தனின் நினைவுகள் மட்டும்தான் இனி. பழகியவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவருடைய சுவையான சுவாரசியமான பேச்சுக்கள் கதைகள். பல்கலைகழகத்தில் பொறியியல் மாணவனாக பயின்றகாலத்தில் கவிதைகள் படைப் பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவருக்கு முற்போக்கு இலக்கிய வியாபாரிகள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றாக தவிர்த்தார். அன்றைய காலகட்டத்தில் பேராசிரியர் இவருடைய திறமையை அறிந்து இவரைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டுக்குள் இருந்த சேந்தனிடம் தந்தை பண்டிதர் வீரகத்தி சேதியைச் சொன்னார். சேந்தன் அந்த பே(ர்) ஆசிரியரை சந்திக்க விரும்பவில்லை. அதற்கு தந்தையார்,
‘பேராசிரியரடா’

தோழர் ‘சே’ இன் பிறந்த நாள் இன்று

(Sutharsan Saravanamuthu)

சக மனிதனை நேசிக்க தெரிந்த மனிதன் சேவுக்கு இன்று பிறந்த நாள், அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்றுவரை வெளிநாட்டிலிருந்து வந்து இந்திய ஏழை விவசாயிகளை சந்தித்த ஒரே தலைவன் சே தான்,இலங்கைக்கு வந்து தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார் .உலகிலே மலையக தமிழர்களை சந்தித்த ஒரே தலைவர் இன்றுவரை அவர் ஒருவர்தான், மலையகத்தில் சே தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, சே இலங்கை வந்தார் என்ற விடயமே பல தமிழர்களுக்கு தெரியாது.