போலி ஆவணங்களுடன் கோப்பாய் இளைஞன் கைது

போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று, ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருணா செய்ததையே இன்று விக்னேஸ்வரன் செய்கிறார்

(என்.ராஜ்)

“கருணா செய்த வேலையை தான் இன்று விக்னேஸ்வரன் செய்திருக்கிறார்” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழில், இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’

அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களைப் பொய்யான வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவர்களுக்குச் செய்கின்ற அநீதியாகும், துரோகமாகும்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கே எமது ஆதரவு’

(க. அகரன்)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தளம் – 04 – ஈழத் தமிழ் அரசியல் நேற்று, இன்று, நாளை

(தமிழ் விவாதிகள் கழகம்)

ஈழத்தமிழ் அரசியலை நோக்குகின்ற போது மூன்று போக்குகளை அவதானிக்கலாம்.

முதலாவது கோட்பாட்டு ரீதியான சிந்தனைப்போக்கு, இது தமிழரின் விடுதலை அடைவது பற்றிய கோட்பாட்டுருவாக்கம், தமிழ்த்தேசியம்,சுயநிர்ணயம், தனிநாடு போன்றவற்றை உள்ளடக்கியது. இரண்டாவது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுசார் சிந்தனைப்போக்கு, இது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கான செயன்முறை சார்ந்தது.

செங்டு துணைத்தூதரகத்தை மூடுமாறு ஐ. அமெரிக்காவுக்கு சீனா உத்தரவு

சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு இன்று சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை சீனா மூடுமாறான ஐக்கிய அமெரிக்காவின் இவ்வார வலியுறுத்தலொன்றுக்கு சீனா பதிலளித்துள்ளது.

கிழக்கே ஓர் அஸ்தமனம்

1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது.

நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும். ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும்.

50 ஆண்டுகளுக்குப் பின் பழைய இடத்துக்கு வந்துசேரப் போகின்ற தமிழ் தலைமை!

(Maniam Shanmugam)
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத் தேர்தல் 1970இல் தமிழரசு – தமிழ காங்கிரஸ் கட்சிகள் மண் கவ்வியது போன்ற ஒரு நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றது. ஏனெனில் அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் இடையில் 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் அச்சொட்டாக ஒரு ஒற்றுமை இருக்கின்றது.

சிங்கப்பெண்ணே…

(Rathan Chandrasekar)

குடிக்கிற தண்ணிக்காக ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி பழி சொல்லி காரணம் சொல்லிட்டிருக்க –

நம்ப வேலூர் பொம்பளைக மட்டும் –
15 வருசத்துக்குமுந்தி காஞ்சுபோன ஒரு ஆத்தையே தூர் வாரி சாதனை பண்ணிருக்காங்க.