மறுமலர்ச்சி யுகத்தில் உருவான புதிய அரசியல் கலாசாரம்

கடந்த ஜனாதிபதித் தேர்தல், அதற்கு பின்னரான பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பலரும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தனி ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாது என்பதே கடந்தகால வாதமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அந்த கூற்றை சுக்குநூறாக்கிவிட்டது.

“இன, மத, சாதி ரீதியான அமைச்சரவை அல்ல”

அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய விஜயத்தின் பின், ஜனாதிபதி சீன விஜயம்

தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவரும், புதிய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என  என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

3 நாட்களுக்கு பரீட்சைகள் இல்லை

நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கவனத்தில் கொண்டு, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்கெனவே, திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளே பிற்போடப்பட்டுள்ளன. அவ்வாறு பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகள், அடுத்தமாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

மன்னம்பிட்டி – மகா ஓயா வீதி மூடப்பட்டுள்ளது

பொலன்னறுவை மன்னம்பிட்டி – மகா ஓயா வீதி சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. இப் பாதையில் பயணிக்கவுள்ளோர் வேறு பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

புதிய எம்.பிக்களுக்கு பிரதமரின் விசேட அறிவுரை

பாராளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  

குவைத்திலிருந்து 32 கைதிகள் நாடு திரும்பினர்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர், வரலாற்றில் முதல் தடவையாக குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) மதியம் வந்தடைந்தனர்.“

ராமயன்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம் குளம் உடைபெடுக்கும் அபாயம் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதி கம நல சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய உடனடியாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் எம்.பிக்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.