ரணில்-தமுகூ சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்  முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கும்  இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலிலுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், துஷார உப்புல்தெனிய, அளுத்கடை எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை புதன்கிழமை (11) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு சர்ச்சை: ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள சில அதிகாரிகளே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்திய ஜனாதிபதி மன்னிப்பு ஊழல் குறித்துப் பேசுகையில் கூறினார். 

பிரபல தொழிலதிபர் அதிரடியாக கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக நிலவி வந்த ரூ.700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய கூட்டாளி கைது

கம்பஹா மற்றும் மினுவங்கொட பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திவரும் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தங்கும் வசதிகளை வழங்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை மினுவங்கொட பகுதியில் வைத்து சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

CIABC க்கு புதிய புலனாய்வு பணிப்பாளர்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஐந்து மூத்த அதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது நியமிக்கப்பட்டுள்ளனர்.

நூலக அலுவலர் குறித்த தவறான தகவல்: விசாரணை நடாத்த உத்தரவு

கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, குறுந்துவத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

323 கொள்கலன்களின் முழு விபரம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட 323 சர்ச்சைக்குரிய கப்பல் கொள்கலன்களின் விரிவான பட்டியலை பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, திங்கட்கிழமை (09) வெளியிட்டார். முழு பட்டியல் பின்வருமாறு,… என்றாவறு எக்ஸ்செல் வேலை பக்கத்தில் முழுமையான விபரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது

காட்டுப்பாதை வெள்ளியன்று திறக்கப்படும்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூன் மாதம் 04ம் திகதி மூடப்படும் என, அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர்  சிந்தக்க அபேவிக்கிரம  ஞாயிற்றுக்கிழமை (09) அன்று தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, போக்குவரத்து அமைச்சகமும் ரயில்வே துறையும் காங்கேசன்துறை (KKS) ரயில் பாதையை தற்போது அந்தப் பகுதியில் வளர்ச்சியில் உள்ள ஒரு புதிய தொழில்துறை பேட்டை வரை நீட்டித்துள்ளது.