அதுல திலகரத்ன மாயம்?

4 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எம்.அதுல திலகரத்ன என்பவர் வெசாக் போயா தினத்தில் இருந்து பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது மே.2 அன்று விடுவிக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது.

“தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க சட்டமூலம் ”

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் சட்டமூலமத்தை கொண்டுவருவதற்கு  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ். மாநகர மேயராக மதிவதனி பரிந்துரை

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வன வளத்திணைக்களத்தினால்  மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்ட விரோத முறையில் கடத்தமுற்பட்ட முதிரைமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

ஷொக் கொடுத்தது மின்சாரம்: 15 சதவீதம் அதிகரிப்பு

மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL)  புதன்கிழமை (11) அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12,  முதல் அமலுக்கு வரும் . 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட கட்டணங்கள்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்

கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லொஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.

பாடசாலைகளில் ஒழுக்கம் நிர்வகிக்கப்பட வேண்டும்

எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஒரு பாடசாலை, அதன் மாணவர்களுக்கு அறிவையும் திறமையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒழுக்கமான வாழ்க்கை வாழத் தேவையான மனப்பான்மைகளும் மதிப்புகளும் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

போராட்டத்தை கட்டுப்படுத்த கடற்படை வீரர்களை களமிறக்கிய ட்ரம்ப்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கபட்டுள்ளனர்.