புத்தளம் வைத்தியசாலையில் முள்ளந்தண்டு நேராக்கல்

புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை கடந்த மார்ச் 25 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் இவ்வகையான சத்திரசிகிச்சை புத்தளத்தில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம் வாரீர்!” மலையகப் பெருந்தோட்ட மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வரும் அடிப்படைச் சுயவுரிமைப் பிரச்சினைகளில் முதன்மையானது நில உரிமை மற்றும் வீட்டுரிமை ஆகும்.

பிஹார் முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை நேற்று  இராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்த முதல்வராக பதவியேற்கும் பொருட்டு, பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சாம்ராட் சவுத்ரி இன்று முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள தரப்பினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க இராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

யாழில் புத்தாண்டு வர்த்தகம்…

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், பொருட்களின் விலையேற்றம் காரணமாக வியாபாரம் இம்முறை மந்தகதியில் காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்திற்காக அயராது உழைப்போம்: பிரதமர் வாழ்த்து

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: ஜனாதிபதி வாழ்த்து

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும்  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.

அமெரிக்காவின் யுத்தக் கோரிக்கையை நிராகரித்த உலக நாடுகள்

(Mukinthan Thurairajasingham)

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முற்றுகையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தி, உலக நாடுகளின் தலைநகரங்களில் ஒருவித வெறுப்பை அமெரிக்கா மீது ஏற்படுத்தியிருந்தது.

தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது

(நியூசிலாந்து சிற்சபேசன் )

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.