இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் இந்து சமுத்திரத்தில் இன்று (12) அதிகாலை 2.34 மணியளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.