மாகாண சபைகளை மேம்படுத்தும் அரசியல் செயற்திட்டத்தில் இறங்கியிருக்கும் இணைந்த வடக்கு — கிழக்கு மாகாணசபையின் முதலும் கடைசியுமான ஒரேயொரு முதலமைச்சர் ஏ. வரதராஜப் பெருமாள்.

(டி.பி.எஸ். ஜெயராஜ்)

1988 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணசபைகள் முறை, பல வருடங்களாக வெவ்வேறு மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவுசெயயப்பட்ட பல முதலமைச்சர்களை கண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனியொரு முதலமைச்சர் என்பதே நியமமாக இருந்த போதிலும், கடந்த காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கும் இருந்தது.