நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகும் சட்டத்தரணிகள்

நாளைய தினம் அனைத்து வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பத்தரமுல்ல, அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு பிறகு, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.