அனைத்துவகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடைவிதித்துள்ளதாக ஈரானிய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் போர் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய ஈரான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.