இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (05) இச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறையில் இருக்கும்.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ் நாட்டு கப்பல்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவிற்கு கரம் கொடுக்கும் ரஸ்யா

கியூபாவின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, ரஷ்யா தனது இரண்டாவது எண்ணெய் கப்பலை அந்நாட்டிற்கு அனுப்பவுள்ளதாக ரஷ்ய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சிவிலியோவ் நேற்று (2) அறிவித்துள்ளார்.

2,010 கைதிகளை விடுதலை செய்கிறது கியூபா

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கியூபா மீது விதித்துள்ள கடும் பொருளாதார அழுத்தத்தினால் அந்நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு நடவடிக்கையாக, 2,010 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக கியூபா அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்குமா எரிபொருளின் விலை?

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இலவச எரிபொருள் விநியோகத்தால் போக்குவரத்து நெரிசல்

இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தினால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, அந்தப் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில், 100,000 டாலர் மதிப்பிலான  எரிபொருளே இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 

‘ஈரான் வெற்றியைப் பிரகடனப்படுத்தி போரை முடிக்க வேண்டும்’

தனது நாடு “வெற்றியைப் பிரகடனப்படுத்தி, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்” என்று , ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜாரீஃப், வலியுறுத்தியுள்ளார்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.

வடக்கின் கடல் வளம்: 100 மில்லியன் டொலர் இலக்கு

“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப்பொ பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரின செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்; காணி அளவீடு தற்காலிகமாக நிறுத்தம்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல் இராணுவ முகாமிற்காக (SLEME), பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.