கொழும்பு கதிர்காமம்(திசமஹரகம) வரையிலான தோராயமாக 275 கிலோ மீற்றர் தூரத்தை இலகு பயணமாக்க அமைக்கப்பட்ட தெற்கு அதி வேக விரைவு சாலை மக்களுக்கு(பாமர மக்களுக்கு அல்ல) சில சௌகரியங்களை செய்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் இதற்குள் ஒரு சோகம் நிறைந்துதான் காணப்படுகின்றது. கிராமங்களை, உறவுகளைப் பிரித்து ஊடறுச் செல்லும் இந்த சாலை உறவுகள் சந்திக்க வேண்டின் சாலையில் இரு மருகிலும் உள்ளவர்கள் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மிகக்குறுகிய இடவெளிகளில் மேம் பாலங்களை அமைத்தல் என்பது தற்போதைக்கு சாத்தியமற்ற நிலமைகள் காணப்படுவதினால் இது சாதாரண பாமர் மக்களின் உணர்வுகளை பாதிப்படையச் செய்திருக்கின்றது. கட்டணம் செலுத்தும் போக்குவரத்து முறமைகளும் மத்திய தர மேல்தட்டு மக்கள் வரைக்கும் கட்டணம் செலுத்தி பயணிக்க முடிகின்றது. சாதாரண உழைக்கும் மக்கள் இந்த அதி வேக சாலையை பயன்படுத்த முடிவதில்லை. இரு வழிப்பாதையின் நடுவில் அழகாக நாட்டப்பட்டு பச்சை பசேல் என பராமரிக்கப்படும் அழகு செடிகள் மேற்குல எங்கும் காணமுடியாக அழகுதான் இதே மாதிரியான செயற்பாட்டை தமிழ் நாட்டின் வேக சாகைளின் நடுவில் ரோஜா செடிகளை நட்டு அவ்அவ் பிரதேச மக்களால் பராமரிக்கப்படும் அழகு என்னை கவர்ந்தது உண்டு.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………!(Part 10)” தொடர்ந்து வாசிக்க…)