இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

(“இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்’

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஜோசப் பரராசசிங்கம் கொலை ஏன்? கருணா விளக்கம் !!!

மட்டக்களப்பு போராளிகளை உலகம் முழுக்க சென்று விமர்சனம் செய்ததின் விளைவுதான் பரராசசிங்கம் கொலை. யோசப் பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள். ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொன்றார்கள். அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது. இதை போல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்ஸ்லி ராசநாயகத்தை புலிகள் கொன்றார்கள். இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப் போகின்றீர்கள்?

(“ஜோசப் பரராசசிங்கம் கொலை ஏன்? கருணா விளக்கம் !!!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான சாத்தியமான வழிமுறைகள்

 

அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் 2011களில் நாடு முழுவதும் பேசி வந்தார்.

(“தமிழருக்கான சாத்தியமான வழிமுறைகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை என்ற இன்றைய முயற்சியும்…….!

(சாகரன்)

ஆதிக்க தமிழ்த் தலமைகள் அன்று தொட்டு இன்று வரை தமது பதவிக்கான கோஷங்களை மட்டும் முன்வைத்தே அரசியல் நடாத்தி வருகின்றனர். இவர்களிடம் எப்போதும் தாம் சார்ந்த சமூகத்தின் எதிர்காலம்பற்றி சீரிய பார்வையோ, திட்டமோ, தீர்க்க தரிசனமோ, அல்லது இராஜதந்திரமோ திறமையோ இருந்தது இல்லை. நாம் ‘தோற்றுப் போனவர்கள்’ என்ற தோற்றப்பாட்டிற்கு சிங்களப் பேரினவாதத்தை விட தமிழ் குறும் தேசியவாதமே முக்கிய காரணியாக இருந்துகொண்டே வருகின்றது. தமிழ் மக்கள் பேரவை என்ற இன்றைய முயற்சியும் இந்த தட வழிப்பாதையில் பயணிக்கப்படவே உருவானதாக தோன்றுகின்றது. ஆனாலும் இங்கொன்றும் அங்கோன்றும் என நம்பிக்கைகள் தமிழ் தரப்பில் அவ்வப்போது துளிர்விட்டாலும் முளையுடனேயே அவை கருக வைக்கப்பட்டதே இங்கு யதார்த்தம்……? சோகம். ஆனாலும் நாம் தொடர்ந்தும் முயல்வோம்……! வெல்வோம்…. என்ற நம்பிக்கை எமக்கு உண்டு

தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வலம்புரி ஆசிரியர் வலம்புரி என்ற மின்னஞ்சல் ஊடாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.அதன் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவில்லை, ஏற்கனவே இணைத்தலைவர்கள் யார், உறுப்பினர்கள் யார் என நியமிக்கப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இந்த அமைப்புக்கான இணையத்தளமும் உருவாக்கப்பட்ட நிலையிலேயே சனிக்கிழமை இரவு இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குரார்ப்பண கூட்டம் முடிந்த ஒரு சில மணி நேரத்திலேயே இணையத்தளம் இயங்க ஆரம்பித்ததென்றால் இது எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட விடயம் என்பது தெளிவாகும்.

(“தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அங்குசமா தமிழ் மக்கள் பேரவை ?

2013ல் வட மாகாண சபை தேர்தல் முடிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்ததும், “அமைந்தது தமிழர் அரசு” என முதன்மை செய்தியாக உதயன் பத்திரிகையில் வந்தது. இன்று 2015ல் “உதயமானது தமிழ் மக்கள் பேரவை” என முதன்மை செய்தியாக வலம்புரி பத்திரிகையில் வந்துள்ளது. தமிழ் அரசியலின் பரிணாம வளர்ச்சி என இதனை பார்க்கலாமா? எதிர்பார்த்த படி பூனை கூடையில் இருந்து வெளியே வந்து விட்டது (The cat is out of the bag). இனி அறிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிக்கும் பத்திரிகை பலம் ஒரு வரப்பிரசாதம். உதயன், வலம்புரி இரண்டும் வாங்கினால் தான் தகவல்களை சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்கலாம் என்ற நிலை வாசகனுக்கு நிச்சயம் ஏற்படும்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அங்குசமா தமிழ் மக்கள் பேரவை ?” தொடர்ந்து வாசிக்க…)

கடவுள் காப்பாற்ற மாட்டார்! -நாசர்

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது.
(இளைஞர்களின் பலத்த கைதட்டல் ஆரவாரத்துக்கிடயே கறுப்புடை அணிந்து நடிகர் நாசர் அதிரடி)

உண்மையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனை இரண்டு தான்…..

ஒன்று ராணுவத்திடம் இருக்கும் மக்களுடைய காணிகள் …….

மற்றது சிறையில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்…….

ஆகவே இவர்களுக்கு ஒரு கட்சி தேவை இல்லை…….

அவர்களுக்கே அது புரிகிறது போலும்…….

உளவு அமைப்புகளுடன் சேராமல் எந்த ஒரு அமைப்பும் இருக்க முடியாது……..

விக்கி ஐயாவும் அமரிக்கா போய் வந்த பின்தான் இவ்வளவு துள்ளலும்…….

(“உண்மையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனை இரண்டு தான்…..” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 19.12.15 அன்று திருமணப்பதிவு முகாம் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் உத்தரவுக்கிணங்க பதிவுத்துறையினர் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தினர் இணைந்து நடாத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களில் இந்த திருமணப்பதிவு முகாம் நடைபெற்றது.

(“தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்” தொடர்ந்து வாசிக்க…)