பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்

(காரை துர்க்கா)
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார்.

(“பூச்சியத்தை நோக்கிச் செல்லும் இராச்சியம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் சீனா நேரடி முதலீடு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக, மேலும் 146 ​மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்ய, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

(“இலங்கையில் சீனா நேரடி முதலீடு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி, நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில், முதல் முறையாக ஒன்றுகூடியது.

(“வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: கூடியது செயலணி” தொடர்ந்து வாசிக்க…)

எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?

(Jeeva Kumaran)

இலங்கையில் தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் மாவிட்டபுர கந்தசாமி ஆலய தேர் எரியூட்டப்பட்டது கறையூட்டப்பட்ட சரித்திரம். சுமார் 1½ மாதங்களுக்கு முன்னால் வரணியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயிலின் தேரை JCB இயந்திரம் கொண்டு இழுத்துள்ளார்கள் கோயிலின் நிர்வாகத்தினர்.

(“எங்கே செல்லுகிறது இந்தப் பாதை?” தொடர்ந்து வாசிக்க…)

நல்லது நடக்கட்டும்

(தங்கவேல் மரகதமுத்து)

வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டோருக்கான நினைவுக்கூட்டத்தை ரெலோவினர் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கினம். இதில விடுதலைப்புலிகளின் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் துளசி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் பின்னாள் வடிவமான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வரதராஜப்பெருமாள், ரெலோ செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கினம்.

(“நல்லது நடக்கட்டும்” தொடர்ந்து வாசிக்க…)

கியூபாவிற்கான பயண அனுபவங்களும் கியூபாவின் உள்ளக நிலமைகளும் கலந்துரையாடல்

ஆக்க பூர்வ மற்றும் சிந்தனை மையம் ஒழுங்கு செய்த கியூவிற்கான பயண அனுபவங்கள் மற்றும் கியூபாவின் உள் கள நிலைமைகள் பற்றிய அனுபவக் கலந்துரையாடல் ரொறன்ரோ கனடாவில் நேற்று நடைபெற்றது. கனடா கியூப நட்புறக் களத்தின் பிரநிதிகளும் இலங்கையிற்கான பிரநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பரிமாறினார். கியூபா தொடர்ந்தும் பிடல் காஸரோ காட்டிய வழியல் சுய சார்புடைய சோசலிச கொள்கையுடன் உறுதியாக தன்னை நிலை நிறுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் இதற்கு பெரும் தடையாக இருக்கும் அமெரிக்காகா அதன் நேச நாடுகள் விதிக்கும்பொருளாதார தடைகளும் இன்னபிற மறைமுக முதலாளித்து நாடுகளின் இடைஞ்சல்கள் பற்றியும் கருத்துரை வழங்கப்பட்டது .

(“கியூபாவிற்கான பயண அனுபவங்களும் கியூபாவின் உள்ளக நிலமைகளும் கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)

(சாகரன்)

1990 களில் இணைந்த மகாண அரசை இல்லாமல் செய்ய பிரேமதாசா கையில் எடுத்த இருவர் பிரபாகரனும் தேவானந்தாவும் ஆவர். முதலாமவரை ஆயுத ரீதியிலும் மற்றயவரை அரசியல் ரீதியிலும் தன் எண்ணத்தை நிறைவேற்ற பாவிக்க முனைந்தார் பிரேமதாச. இதற்காக அவரகளுக்கு சன்மானங்களும் வழங்கினார். புலிகளின் அவசர முடிவு பிரேமதாசாவை கொன்று புதைக்க, சந்திரிகா மகிந்தா என அரசியல் களங்கள் மாற மத்திய அரசுடன் இணக்க அரசிலை நம்பி ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்று புறப்பட்டு வடபகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாத அபிவிருத்தியை செய்துகாட்டினார் தேவானந்தா. தன் வழி தனி வழி அது ஒருவனின் வழி என்று புறப்பட்ட தேவானந்தா தமிழர் அமைப்புக்களிடையே ஐக்கிய முன்னணி பற்றி அதிகம் அக்கறை காட்டாமல் செயற்பட்டார். இடையிடையே தேவையிற்கு ஏற்ப ஐக்கியத்திற்காகவும் அறிக்யை விட்டு சிலருக்கு ஆசனமும் கொடுத்து தனது ஆசனத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான வாய்புக்களை உறுதிபடுத்திக் கொண்ட அரசியல் சாணக்கியர் இவர்.

(“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………(அறிமுகம்…).

(திரு சிவா ஈஸ்வரமூர்த்தியினால் எழுதப்பட்டு பதிவிடப்படும் தொடரின் ஆரம்ப அத்தியாயங்கள் சில விடுபட்ட நிலையில் அவற்றை வெளியிடுகின்றேன் – ஆர்)

2009 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதிக்கு பின்னர் நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முதன்மையான இருந்த காரணம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1986 இலிருந்து 30 வருடங்களாக நான் எனது தாயக மண்ணில் முழுமையாக சுதந்திரமாக வாழ்வதற்கும், சுற்றிப்பார்ப்பதற்கும், வாய்ப்புக்கள் எற்படவில்லை. யுத்தத்தின் முடிவு நான் புலம் பெயர்ந்ததற்கான காரணத்தை இல்லாமல் செய்திருந்தாலும் வாழ்வில் ஏற்பட்ட புதிய உறவுகள் உடனடி மீள் குடியேற்றத்திற்கு வாய்ப்புக்களை எற்படுத்தவில்லை. ஆனாலும் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிந்த உடன் நான் பிறந்த மண்ணுக்கு முழுமையாக திரும்பி விடுவது என்பது என் சிந்னையில் முடிவாக எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் 30 வருட காலச் சுழற்சியில் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் இதனை ஒட்டிய கடமைகளும், பொறுப்புக்களும் எல்லாவற்றையும் உடனடியாக பொத்தென்று போட்டுவிட்டுச் செல்ல முடியாமல் தடை போட்டுக் கொண்டே வந்தன.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த………(அறிமுகம்…).” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)

(சாகரன்)

2009 இற்கு பின்னராக உருவான தேர்தல் ஜனநாய சூழலை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் முன்னாள் போராளிகள் அமைப்புக்களின் கட்சிகளும் இன்ன பிற மக்கள் நலன் சார்ந்த சக்திளும் பாரம்பரிய அப்புக்காத்து அரசியலிடம் இருந்து தமக்கு கைமாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே இருந்த சுகு சிறீதரன் போன்றவர்கள் தலமை தாங்கும் ஈபிஆர்எல்எவ் இருந்து பிரிந்து சென்று தற்போது தமிழர் சமூக ஜனநாயக் கட்சி போன்று பரிணாமம் அடைந்த கட்சிகளுடன்  இணைத்துக்கொண்டு ஒரு பலமான மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக பூர்வமான ஐக்கியத்தை ஏற்படுத்தி செயற்பட்டிருக்க வேண்டும். இதற்கான பாரிய தார்மீகப் பொறுப்பு இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேச்சாளராக செயற்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு நிறையவே வாய்புகள் இருந்தன. விடுதலைப் போராட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் பத்மநாபாவின் கொலையிற்கு பின்பு பிளவுபடாத ஈபிஆர்எலஎவ் இன் செயலாளராகவும் ஏன் இதன் பின்பு புலிகளால் உருவாகப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரபாகரனின் நம்பிக்கைகு பாத்திரமாக இருந்த சுரேஷ் இற்கு கிடைகப் பெற்ற வாய்பை விட வேறு யாருக்கும் இந்த வாய்பு இருந்ததாக அறிய முடியவில்லை. (“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)