இந்தியாவின் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இலங்கையின் இராஜாங்க கல்வி அமைச்சுக்கும் இடையில், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையிலிருந்து 100 தமிழ் மொழி மூல ஆசிரியர்களை, ஆசிரியர் பயிற்சி நெறிகளைப் பெற்றுகொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
Author: ஆசிரியர்
முதுபெரும் கம்யூனிஸப் போராளி
முதுபெரும் கம்யூனிஸப் போராளியான ஆந்திராவைச் சேர்ந்த
கொண்டபல்லி கோட்டேஸ்வரம்மா இன்று அதிகாலை தனது 100வது வயதில் காலமானார். மக்கள் யுத்தக் கட்சியின் நிறுவனர் கொண்டபல்லி சீதாராமையாவின் வாழ்க்கைத் துணைவர் கோட்டேஸ்வரம்மா. செவ்வணக்கம்
தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 7)
(Thiruchchelvam Kathiravelippillai)
அம்பாறை மாவட்டத்தில் தமது நிலையான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது. 1985 இலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வாழ்கின்ற ஊர்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டவண்ணமிருந்தன. தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற போது தமிழ் மக்கள் அச்சமடைவதுடன் முஸ்லிம் மக்களுடன் பகையுணர்வினையும் வளர்க்க வேண்டும் எனபது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.
(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 7)” தொடர்ந்து வாசிக்க…)
விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன.
(“விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்” தொடர்ந்து வாசிக்க…)
மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார்.
(“மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?” தொடர்ந்து வாசிக்க…)
புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part5)
சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.
(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part5)” தொடர்ந்து வாசிக்க…)
புத்தக விமர்சனம்
தெஹ்ரான் உடன்படிக்கை
(ஜனகன் முத்துக்குமார்)
துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக போராளிக் குழுக்களைத் தகர்த்தல் தொடர்பாகத் தீர்மானிக்க ஏதுவாய் இருந்தது எனக் கருதப்படுகின்றது. இது டமாஸ்கஸ் தொடர்பில் இந்நாடுகள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அதனைத் தொடர்ந்து டமாஸ்கஸிலிருந்து ஆயுததாரிகள் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்தே, இட்லிப் நகர் தொடர்பான மாநாடு நடைபெற்றுள்ளது.
எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 6)
இன்றைய நாளின் இறுதி பயணமாக மாதகல், கீரிமலை, காங்கேசன்துறை என்று கடந்த வருடம் முற்பகுதியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை பார்வையிடுவது எனத் தீர்மானித்து பண்ணைப் பாலத்தினூடு யாழ் பெரு நிலப்பரபை அடைந்தேன். நேரப் பற்றாக்குறையை சரி செய்ய நாவாந்துறைஇ காக்கைதீவு சந்தியூடாக மானிப்பாயை அடைந்து சித்தங்கேணி பண்டத்தரிப்பு ஊடாக மாதகல் கடற்கரையை அடைவது திட்டம். எனக்கு மிகவும் அத்துப்படியான பிரதேசங்கள் இவை. எனது வழிகாட்டல்களும்? சந்திகளில் திருப்பல் என்ற குறுக்குப் பாதை அறிவுறுத்தல்களும் எனது வான சாரதிக்கு ஆச்சரியமாக இருந்தாலும் எனக்கு இது ஒன்றும் 30 வருடங்கள் கடந்தாலும் எனக்கு புதிதாக தோன்றவில்லை.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 6)” தொடர்ந்து வாசிக்க…)
குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும்
குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும் செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.அதுவும் பாரத தேசத்தின் பெரும் தலைவரான ராஜீவ் காந்தியையும் , ஈழ மக்கள் தலைவர் பத்மநாபாவையும் புலிகள் கொன்றதற்கு அவர்கள் சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டும் அனுபவித்தும் விட்டார்கள். (“குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)