ஒன்ராறியோ தேர்தல்

கனடிய அரசியோலில் முதன் முதலாக கால் பதித்தவர் சந்திரன் மயில்வாகனம் என்பவர்.கொழும்பைச் சேர்ந்த இவர் புதிய ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கினார்.அன்று ஒரு தளம் அரசியல் களத்தில் இறங்கியபோதும் புலி ஆதரவு அலை தமிழ் பேசும் மக்களை இவரின் பக்கம் திரும்பவிட வில்லை.

(“ஒன்ராறியோ தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

(“வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’

(எம். காசிநாதன்)
தனியார் தொழிற்சாலைக்கு எதிரான 23 வருடகாலப் போராட்டம், இப்போது 13 பேர் உயிரிழந்த துயரமான துப்பாக்கிச்சூட்டில் வந்து நிற்கிறது. இந்தச் சோகத்தின் பிடியில், ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி சிக்கித் தவிக்கிறது. ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை எதிர்த்து, இது ஒரு நூறு நாள் போராட்டம் என்றாலும், 99 நாட்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று நடைபெற்ற போராட்டம் 100 ஆவது நாளில், ‘ஸ்டெர்லைட் தொழிற்சாலை முற்றுகை’ என்ற ஆவேசப் போராட்டமாக மாறியபோது, தமிழகப் பொலிஸ்துறை, அதைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போய் விட்டது.

(“தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’” தொடர்ந்து வாசிக்க…)

தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகப்பார்க்கும் ஒரு சமூகம்,

(Thamil Mathy)

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான பயணத்தில் ஆயுதப்போராட்டத்திற்கான தேடலின் பிதாமகனும் இலங்கை இராணுவவத்தினரிடம் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்கு சயனைட் உட்கொண்டு தனது உயிரை தன் இனவிடுலைக்காகவும், தன் தேசவிடுலைக்காகவும் கொடையாக கொடுத்த மாவீரன் பொன் சிவகுமாரன் அவர்கள் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இன்றாகும், எமது மூதாதையரும் எமது வழிகாட்டியுமான இந்த மாவீரருக்கு தமிழீழ மண்ணும் மக்களும் தமது வீரவணக்கத்தை தெரிவிக்கட்டும்,

(“தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகப்பார்க்கும் ஒரு சமூகம்,” தொடர்ந்து வாசிக்க…)

கிண்ணத்தைத் தக்க வைக்குமா ஜேர்மனி?

(Shanmugan Murugavel)
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடிய அணிகளிலொன்றாக, ஜேர்மனி காணப்படுகின்றது.

(“கிண்ணத்தைத் தக்க வைக்குமா ஜேர்மனி?” தொடர்ந்து வாசிக்க…)

‘பிளவு இல்லை’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, புதிய அதிகாரிகள் தெரிவு இடம்பெற்றது என்று தெரிவித்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் கட்சிக்குள் எவ்விதமான பிளவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

(“‘பிளவு இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

அண்ணன் சிவகுமாரன்.

(Amirthalingam Baheerathan)

திரு பொன்னுத்துரை சிவகுமாரன் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்ட ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெயர். ஆனால் ஜனநாயக போராட்டத்தை மதித்து அதன் பங்கையும் உணர்ந்து போராடப்புறப்பட்ட இளைஞனின் அடையாளம். உரும்பிராய் மண் பெற்றெடுத்த புனித ஆத்மாவின் பெயர்.

(“அண்ணன் சிவகுமாரன்.” தொடர்ந்து வாசிக்க…)

48 வது இலக்கிய சந்திப்பு – ரகறொன்ரோ – கனடா

(சாகரன்)

இரண்டு நாள் நிகழ்வாக ஜுன் 2, 3ம் திகதிகளில் நடைபெற்று முடிந்திருகின்றது. பார்வையாளனாக கலந்துகொள்ளும் வாய்பு எனக்கு கிடைத்தது. கடந்த வருடம் மலையகத்தில் நடைபெற்ற போது நான் இலங்கையில் நின்றிருந்து போது நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளும் விருப்பு இறுதியாக நேரடிக் காணொளியில் காணும் வாய்பிற்குள் சுருங்கிப் போய்விட்ட வருத்தத்தை இம்முறை நீக்கிவிட்ட உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

(“48 வது இலக்கிய சந்திப்பு – ரகறொன்ரோ – கனடா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்

(காரை துர்க்கா)
“முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு, சாலை, சுண்டிக்குளம் எனப் பல பிரதேசங்களைத் தாண்டிய, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தற்போது யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வரை சென்று விட்டது. இப்படியே சென்றால், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் விகாரை அமையப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.

(“தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்” தொடர்ந்து வாசிக்க…)