10000 மைல்களுக்கு அப்பால் போய் அந்த மண்ணிற மனிதர்கள்மீது (வியட்நாம் மீது) அமெரிக்க இராணுவ உடையணிந்து குண்டுகள் வீசவும் படுகொலை செய்யவும் என்னைக் கேட்கிறார்கள். இங்கு கறுப்பின மக்களை நாய்போல நடாத்தவும் அவர்களது மனித உரிமைகளை மறுக்கவும் செய்கிற வெள்ளை எசமானர்கள் உலகம் முழுமையும் நிற மனிதர்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முனைகிறார்கள். இவர்களுக்காக அந்த ஏழை மக்களின் வீடுகளை எரிக்கவும் படுகொலை செய்யவும் என்னால் முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும்.
Author: ஆசிரியர்
தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை
ஏப்பிரல் மாதம் 25ந் திகதி தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘எதுவரை’ இதழ் 21 இல், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய ‘1952-1986 தோழர் விசுவானந்ததேவன்’ நினைவு நூல் பற்றி எஸ்.கே.விக்கினேஸ்வரன் எழுதிய எதிர்வினைக் குறிப்புகளைப் படித்தேன்………..
‘சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்’
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரைக்கு, எவ்வகையிலும் பதிலளிப்பதற்கு முயல வேண்டாமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட்டுள்ளார்.
(“‘சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்’” தொடர்ந்து வாசிக்க…)
மனிதாபிமானம் கொண்ட புதிய தலை முறைக்காக
தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஜனநாயகம் தன் உண்மை முகத்தைக் காட்டும் போது மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். எதை ஆண்டாண்டு காலமாக, ஆதரித்துக் காத்து வந்தார்களோ, அதுவே அவர்களைக் குறிவைக்கும் போது, பாரபட்சமின்றிக் கொன்றொழிக்கும் போது, மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்தத் திகைப்பிலிருந்து அவர்கள் வெளிவரும் முன்னர், அவர்களது எண்ணங்கள் மடை மாற்றப்படுகின்றன. அதிகாரத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சிந்திப்பது ஆபத்தானது. மக்கள் சிந்திப்பதையும் செயற்படுவதையும் ஒன்றிணைவதையும் அனுமதிப்பதன் விளைவுகளை அவர்கள் அறிவார்கள். இதனால்தான், அறிவால் அல்லது ஆயுதத்தால் மக்களது சிந்தனைக்கும் செயலுக்கும் அவர்கள் தடைபோட முனைகிறார்கள். இது என்றென்றைக்குமானதல்ல.
(“தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல்” தொடர்ந்து வாசிக்க…)
எரிநட்சத்திரமாக வீழ்ந்துபட்டார் மாதலா
ஆந்திராவில் போய் நீங்கள் ‘ரெட் ஸ்டார்’ என்று
ஒரு குழந்தையைக் கேட்டாலும் ,
“எவரு? மாதலா ரங்காராவ்காரு?”
என்று திரும்பக் கேட்கும்.
(“எரிநட்சத்திரமாக வீழ்ந்துபட்டார் மாதலா” தொடர்ந்து வாசிக்க…)
நீதி கிடைக்குமா…?
பூமராங்
(முகம்மது தம்பி மரைக்கார்)
பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும்.
இலங்கை, தேயிலை, தமிழர்கள், உலகம்!
(மீரா ஸ்ரீநிவாசன்)
தேயிலைத் தூள் அடங்கிய ‘டீ பேக்’-ஐ வெந்நீரில் முக்கி கொஞ்சம் பாலும் சர்க்கரையும் சேர்த்து ஒரு கோப்பைத் தேநீர் தயாரிக்கும் எண்ணம் இருந்தால், அதை மெரில் பெர்னாண்டோவுக்குப் பரிமாறிவிடாதீர்கள்.“டீ பேகை வெந்நீரில் போட்ட பின்னர், கோப்பையை ஒரு சாஸரால் மூடி மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். அதன் நறுமணம் வெளியேறாமல் இருக்கும். நினைவில் வைத்திருங்கள், சிறந்த தேநீர் என்பது பாலோ சர்க்கரையோ கலக்காமல் தயாரிக்கப் படுவதுதான்” என்கிறார் கண்டிப்பான தொனியுடன். இலங்கையின் புகழ்பெற்ற தேநீர் நிறுவனமான ‘தில்மா’வை நிறுவியரும் அந்நிறுவனத்தின் தலைவரும் மெரில் பெர்னாண்டோதான்.
‘கூழாங்குளம் சுவீகரிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’
(க. அகரன்)
“வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு” மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதமொன்றை இன்று (28) அனுப்பியுள்ளார்.
(“‘கூழாங்குளம் சுவீகரிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)