“நரேந்திரமோடியின் இந்த நான்காண்டு ஆட்சியில்  15 – 24 வயதுடைய 72 லட்சம் இளைஞர்கள்  வேலை இழப்பு”

– டாக்டர் மன்மோகன் சிங்.

பிரச்சாரத்திற்காக எதையும் பேசும்
இழிவான மனிதரல்ல மன்மோகன் என்பதை
நினைவிற்கொண்டு மேலும் வாசியுங்கள்.

“காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில்
விவசாய விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்ட
குறைந்தபட்ச ஆதரவு விலை 193 சதம்.

பா.ஜ.க ஆட்சியில் அது வெறும்
36 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும்
மோடி ஆட்சியில்
விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி
21% குறைந்துள்ளது;
இறக்குமதியோ 60% ஆக அதிகரித்துள்ளது.

2022 இல் விவசாயிகளின் வருவாய்
இரட்டிப்பாகும் என மோடி சொல்லியுள்ளது
சாத்தியமே இல்லை”

எனவும் மன்மோகன் கூறியுள்ளார்.

(அ.மார்க்ஸ்)

‘‘என் தாய் இத்தாலிகாரர்தான்; ஆனால்…’’ – ராகுல் காந்தி உருக்கம்

என்னுடைய தாய் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்தான், ஆனால், சிறந்த இந்தியராகவே வாழ்ந்து, பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

(“‘‘என் தாய் இத்தாலிகாரர்தான்; ஆனால்…’’ – ராகுல் காந்தி உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்

மத்திய அரசுக்கும் ‘நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில்’ (என்எஸ்சிஎன்-ஐஎம்) அமைப்புக்கும் இடையில் 2015 ஆகஸ்ட் 3-ல் கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பக்கம் பக்கமாக பலரால் விமர்சனங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த ஒப்பந்தம் நாகா மக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அதேசமயம், பக்கத்தில் உள்ள அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. அதில் நியாயமும் உண்டு. ஏராளமான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து, அதன் பிறகு மாநிலங்களின் எல்லைகளும் பரப்பளவும் தீர்மானிக்கப்பட்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் மாறுதல் என்றால் சற்றே பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமுண்டு. எல்லைகள் மாறும் என்பது மட்டும்தான் பிரச்சினையா, வேறு உண்டா என்றும் பார்க்க வேண்டும்.

(“நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்)

ஒக்டைன் 92 – 137 ரூபா

ஒக்டைன் 95 – 148 ரூபா

ஒட்டோ டீசல் – 109 ரூபா

சுப்பர் டீசல் – 119 ரூபா

மண்ணெண்ணெய் – 101 ரூபா

சமுர்த்தி பயனாளிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய்யை பழைய விலையான 44 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காலம் கடந்த ஞானம்

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்!

லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம். – த சோதிலிங்கம்

(“காலம் கடந்த ஞானம்” தொடர்ந்து வாசிக்க…)

‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்னும் நூல் வெளியீடு.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் திருநாவுக்கரசு  அவர்களின் ஆக்கத்தில் உருவான “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” எனும் நூல் வெளியீடு பேர்லீன் நகரில் 08.05.2018 அன்று Kopf str-25,12053 Berlin எனுமிடத்தில் அமைந்த மண்டபத்தில் நடைபெற்றது.

(“‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக’ என்னும் நூல் வெளியீடு.” தொடர்ந்து வாசிக்க…)

உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல

சர்வதேச மாபியாக்களையே!

புலிகளின் பணத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தன் மகளை helicopter இல் அழைத்துவந்து பூப்புனித நீராட்டுவிழா கொண்டாடியுள்ளார் கனடாவில் உள்ள சுரேஸ் என்பவர்.
இவர் 2009 வரை கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்து வந்துள்ளதுடன் அதன்பின் தனது சொந்த உடமையாக்கியுள்ளார்.

(“உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அவர் நேற்று சிக்மகளூரு நகரில் பிரச்சாரம் செய்தார். கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவில் காட்டன்பெட் பகுதியில் உள்ள தர்காவுக்கு அவர் நேற்று சென்றார்.

(“நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது; இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.)

சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம்.

சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.

(“‘ரவுண்ட் அப்’ (‘சுற்றி வளைப்பு’)” தொடர்ந்து வாசிக்க…)

ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை

‘ பக்கத்து வீட்டில் பேயாய் இருப்பது நம் வீட்டில் தேவதையாக மாறாது ‘

அண்மைக்காலமாக இந்த அமைப்புகள் பற்றியும் இந்துத்துவ கருத்தியலின் செயல்பாடுகள் பற்றியும் முகநூலில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றியும் இன்ன பிற மத அமைப்புகள் பற்றியும் ஆழமான உரையாடல் தேவை. அதற்கான சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன் சில அடிப்படையான புரிதல்களை இந்த விவாதத்தின் போது கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்கின்றது.

(“ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை” தொடர்ந்து வாசிக்க…)