இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்

 

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும்.

(“இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மே – 18 ஆம் திகதி என்பது எனன?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டுமொரு தடவை முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறார். வடக்கு மாகாண சபையின் நடவடிக்கையை தவிர மிகுதி அனைத்து விடயங்களிலும் சதிராடுகின்ற தனது சம்பிரதாய கூத்துக்களில் ஒரு பகுதியாக இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளிற்குள் தனியாக நின்று காவடியாடுவதற்கு அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

(“மே – 18 ஆம் திகதி என்பது எனன?” தொடர்ந்து வாசிக்க…)

கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து

………….மிக பெரும் தொகையான பிளாட்டிக் கழிவுகளுடன் மற்றைய கழிவுகளும் இந்த பகுதியில் அகற்றப்படாமல் நீண்டகாலம் இருந்தது….
.
.
…..இந்த கழிவுகளை ராணுவத்தின் உதவியுடன் பெரிய கிடங்கை வெட்டி நிலத்துக்குள் தாட்டிருக்கிறார்கள்…
.
…இப்போது அதைவைத்து தங்கள் அந்த பகுதியை சுத்தமாக்கி விட்டதாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்…

(“கரவெட்டி பிரதேசசபையின் கோமாளிக்கூத்து” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???

முன்பு இருந்த எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு காரியமாக திரு. நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் பதினைந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போகின்றார். இதே தந்திரத்தைப் பயன்படுத்தி உத்திரப் பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று தான் மோடி லோக்சபாவில் நுழைந்தார். அவருடைய இந்தி பேசும் திறமை எப்படி அவரை வெற்றியடையச் செய்ததோ அதே போல் அவருடைய கட்சியினரின் மதவாதக் கலவரங்களை உண்டாக்கும் போக்கும் அக்கட்சியினை இதுவரை வெற்றியடைய வைத்திருக்கும் காரணிகளாக காணலாம்.

(“கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

பத்ம விபூஷண் விருது பெற்ற பழங்குடிப் பெண்மணி

இந்த வருஷம் பத்ம விபூஷண் விருது
பெற்றவர்கள் பட்டியலில்
ஒரு பழங்குடிப் பெண்மணி இருந்ததை
கவனித்திருக்கமாட்டீர்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம்
கள்ளாறு எனும் வனப்பகுதியை சேர்ந்தவர்
லஷ்மி குட்டி அம்மா.

இவர் தன் நினைவாற்றல் மூலம்
500 மருந்துகள் தயாரிக்கிறார்.

அதன் மூலம், பல்வேறு நோய்கள், பாம்புக்கடி, பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட
மலைவாழ்,பழங்குடி மக்களைக்
காப்பாற்றி வருகிறார்.

தாயிடமிருந்து இத்தகைய மருத்துவ அறிவு
தனக்கு வந்ததாகச் சொல்கிறார் இவர்.

தென் மாநிலங்களில் உள்ள
பல்வேறு கல்வி நிறுவனங்களில்,
இயற்கை மருந்துகள் குறித்து பாடம் நடத்துகிறார்
என்றால் பாருங்களேன்.

1995ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து
‘நாட்டு வைத்ய ரத்னா’ விருது
வழங்கப்பட்ட லஷ்மி குட்டிக்கு
2018ஆம் ஆண்டுக்கான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்ட செய்தியை
கொட்டை எழுத்தில் போட்டிருக்கவேணாமா
ஊடகக்காரர்களே?

(Rathan Chandrasekar)

நச்சுத்தன்மையற்ற விவசாயியானர் மஹிந்த

கமத்தொழில் அமைச்சராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர், மஹிந்த அமரவீர, நச்சுத்தன்மையற்ற தேசிய விவசாயி வலையமைப்பின் நச்சுத்தன்யைற்ற விவசாயியாக தன்னை பதிவு செய்துக்கொண்டுள்ளார்.

(“நச்சுத்தன்மையற்ற விவசாயியானர் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய சக ரெலோ போராளிகளை நினைவுகூரும் கூட்டத்தை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பட இதர பல கட்சிகளின் பங்கேற்புடன் ரெலோ நடாத்தியிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் கட்சிகளோ, உறுப்பினர்களோ குறிப்பாக ரெலோவின் முக்கிய தலைவர்களோ சிறிபாரத்தினத்தையும்,, ரெலோவின் நூற்றுக்கணக்கான போராளிகளையும் குரூரமான முறையில் கொன்றொழித்த விதம் பற்றியோ, அதைச் செய்தவர்கள் பற்றி எதையும் வெளிப்படையாகப் பேசியதாகத் தெரியவில்லை.

(தொடர்ந்து வாசிக்க…)

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்று சில நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல பதிவுகளில் மிகத் தெளிவாக விளங்கப் படுத்தி விட்டேன்.  களைப்பாய் இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு விடவும் முடியாதல்லவா. இதை மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர வேறென்ன வெட்டிப் புடுங்குற வேலை எனக்கு இருக்கக் கூடும்.

(“தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்

ரஷ்ய ஜனாதிபதியாக, விளாடிமிர் புடின் நான்காவது தடவையாக பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புடின் இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக ஜனாதிபதி அல்லது பிரதமராக அதிகாரத்தில் உள்ள புடினை, எதேச்சதிகாரமிக்கவர் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றசம்சாட்டியுள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷ்யாவில் புடினுக்கு எதிராக 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

(“நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்” தொடர்ந்து வாசிக்க…)

பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் பாஜக அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறது, பன்னாட்டு கச்சா விலை சரியும் போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் ரூ.10 லட்சம் கோடிகளை வரியாக வசூலித்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “பாஜக அரசு 10,00,000 கோடி வரிகளாக பெட்ரோல்/எல்பிஜி/டீசல் மீது வசூலித்துள்ளது. ஆனால் குடிமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று சாடியுள்ளார்.

(“பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)