மூன்று முக்கிய பொருள்களின் விலைகள் உயர்ந்தன

சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, அசாதாரணமாக உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாளை (15) முதல், திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இன்று (14) வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு வெற்றி, கமலுக்கு தோல்வி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர்.

’வடக்கு மீனவர்களின் பாதிப்புகள் புரிகின்றன’

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதாகத் தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரபல நாடு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலாந்து விலகுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து வெளியேறினால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவித்து அரசுக்கெதிராக  லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதி அஞ்சலிக்காக லக்னோ சென்றார் பிரியங்கா

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில்  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாரதிய ஜனதா கட்சியினர்  சென்ற கார் மோதியது. இதில், விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர்  அஜய் மிஸ்ரா தனது பதவியை இராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய இணை அமைச்சர்   பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சூழலில் பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில்  கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லக்னோ வந்தடைந்தார் பிரியங்கா காந்தி .

மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம்

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயர், லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்படும் என நிதியத்தின் தற்போதைய தலைவரும் வர்த்தக அமைச்சருமான டொக்டர் பந்துல குணவர்தன, இன்று (12) தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, பல்கலைக்கழக கல்வி வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் நிதியத்தைத் தொடங்கிய மறைந்த வர்த்தக அமைச்சர் லலித் அதுலத்முதலிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பெயர் மாற்றம் இடம்பெறுவுள்ளதாகத் தெரிவித்தார்.

’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’

(விஜயரத்தினம் சரவணன்)

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மிகச் சிறந்த தோழரை இழந்து விட்டோம். சிரம் தாழ்த்தி செவ்வஞ்சலிகள்

தோழர் என வாஞ்சயுடன் என்னை அழைக்கும் தோழர் மோகன் சுப்பிரமணியம் நேற்று ( 07- 10-21) மௌனித்து விட்டார். தோட்டத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் மோகன் 1975 இல் செங்கொடி சங்கத்தில் உறுப்பினராக இணைந்தவுடன் தொழிலாளர் வர்க்க சிந்த பனையில் ஈடுபாடு கொண்டு மறைந்த தோழர் ஓ.ஏ.இராமையாவின் உற்ற தோழனாக செயற்பட ஆரம்பித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 490 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 526,873 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 402 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  480,499 ஆக அதிகரித்துள்ளது.