இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

யாழ்ப்பாணத்தில் பறக்கும் கழுகு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் படி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

இதுவரை வந்த தேர்தல் முடிவுகளின் படி சஜித் பிரேமதாச கோட்டபாய ராஜபக்ஷ ஐ விட முன்னிலை வகிக்கின்றார். வடக்கில் தமிழ் மக்கள் 80 வீதத்திற்கு மேறபட்ட அளவில் சஜித்திற்கு வாக்களித்துள்ளனர். அடுத்ததாக கோட்பாயவிற்கு ஆதரவளித்துள்ளனர்.

சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 682,777, 51.31%

கோட்டாபய ராஜபக்‌ஷ
வாக்குகள் – 547,896,
41.17 %

அனுர குமார திசநாயக்க

வாக்குகள் – 43306,

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சில மாவட்ட வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்து உத்தியோகபூர்வமற்ற முறையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

தமிழர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்; இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி

இலங்கையின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதித் தேர்தல்; வாக்களிப்பு ஆரம்பம்

பிரசாரங்கள் ஓய்ந்து, மௌன காலம் அமுலிலிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் வன்முறைகள் எவையும் நேற்றுமாலை வரையிலும் பதிவாகவில்லையென தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்கள் அறிவித்துள்ளன.

ஆறடி வெள்ளத்தில் மிதக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்

உலக புகழ் பெற்ற இத்தாலிய நகரமான வெனிஸ், ஆறடி வெள்ளத்தில் தத்தளிப்பதால், அதன் பழமையான கட்டடங்கள் நீர் சூழ்ந்து காணப்படுவதை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஹிலாரி?

ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சவாலுக்குட்படுத்துமாறு மிகுந்த அழுத்தத்துக்குள் உள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன் நாடாளுமன்றத் தேர்தலில் சோஷலிசக் கட்சிக்கு அதிக ஆசனங்கள்

ஸ்பெய்னில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெட்ரோ சந்தேஸின் சோஷலிச தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறெனினும், தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய வொக்ஸ் கட்சியும் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஸ்பெய்னின் அரசியல் நெருக்கடி நிலை நீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.