பொலிவிய ஜனாதிபதியாக தன்னை பிரகடனப்படுத்திய செனட்டின் பிரதி சபாநாயகர்

பொலிவியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தன்னை செனட்டின் பிரதி சபாநாயகரான ஜெனி அனெஸ் நேற்று அறிவித்துள்ளார். பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக்கவும், எதிர்க்கட்சி செனட்டரான ஜெனி அனஸை இடைக்கால ஜனாதிபதியாக உறுதிப்படுத்தவும் செனட் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மெக்ஸிக்கோ பயணமாகும் இவா மொராலெஸ்

அரசியல் தஞ்சத்துக்காக இலங்கை நேரப்படி இன்று காலையில் மெக்ஸிக்கோவுக்கு அந்நாட்டு இராணுவ விமானத்தில், மத்திய பொலிவிய நகரான சிமோரேயிலிருந்து பொலிவிய ஜனாதிபதி இவா மொராலெஸ் பயணமாகியிருந்தார்.

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்த பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்திய மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்து, தொடர்ந்து அதை நீட்டித்து வருகிறது.

‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’

“சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியை இழந்துவிட்டது” என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் தெரிவித்தார்.

“வடக்கும் கிழக்கும் மாறும்’

வடக்கு கிழக்குக்கு, வெளிநாட்டு உதவித்திட்டங்கைளை பெற்று, அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில் திகழும் மாகாணங்களாக, வடக்கு, கிழக்கை மாற்றியெடுப்பேன் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு பிரதமர் இணக்கம்’

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாகவிருந்துவந்த மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க இணக்கம் தெரிவித்துள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

6 மணித்தியால ஆலோசனைக்கு பின்னர் ரெலோவும் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் தீர்மானித்துள்ளது.

‘நீக்குவதற்குக் காரணம் இல்லை’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதற்கு, எந்தவொரு காரணமும் இல்லையெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது செயற்பாடுகளால் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

எதியோப்பியாவில் ஆர்ப்பாடங்கள்: ’உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்தது’

எதியோப்பியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட் நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அச்சுறுத்தும் சக்திகளை பிரஜைகள் எதிர்க்க வேண்டும் என பிரதமர் அபி அஹ்மட் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று சந்திரிகாவின் மாநாடு

‘அபி ஸ்ரீ லங்கா’ என்ற பெயரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று (050 கொழும்பில் நடைபெறவுள்ளது.