பாழ்ங்கிணறு படுகொலை: 96 மணிநேர விசாரணை

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (23) மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, பிரதான சந்தேகநபர்களை நான்கு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை  கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

’1001’ ஐ விட்டார் ஜனாதிபதி அனுர

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம்  ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை, செவ்வாய்க்கிழமை (24) முதல் பொதுமக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

“மிரட்டுகிறார்கள்” ; சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கெனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளார். 

அமெரிக்காவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது. 

பணம் இல்லை ; QR வருகிறது: நமது நாட்டிலும் அதிரடியாக அமுல்

தேசிய QR கொடுப்பனவு முறையின் பயன்பாட்டை துரிதப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்களப்பையே பரபரபாக்கிய சம்பவம் – 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி!

மட்டக்களப்பையே பரபரபாக்கிய நகையை அபகரித்து பெண்களை கிணற்றுக்குள் போட்டு வந்த கும்பல் சிக்கிய கதை இது.
கடந்த வியாழக்கிழமை, மட்டக்களப்பையே கதி கலங்க வைத்த சம்பவமாக, வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 ½ வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (23) அன்று கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கோரிக்கை விடுத்தால் எரிபொருள் வழங்க தயார்

இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்

ஈரான் நாட்டுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.