மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’

(ப. தெய்வீகன்)

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண்ட ஒரே விடயம்.

(“மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’” தொடர்ந்து வாசிக்க…)

ஏறு தழுவுதல் – ஆதரவு

நாளை நடைபெறவிருக்கும் கவனயீர்ப்புக்கு ஆதரவளிப்பது பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாள அழிப்புகளுக்கு எதிராக சிந்திக்கத் தொடங்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகிய அறம், நீதி போன்றவற்றை தொடர்ந்தும் காத்துவரும் ஒரு மொழியின் சந்ததிகள் அதன் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும் அதன் வாழ்வு முறைக்கும் ஏற்படும் ஆபத்துக்களைக் கவனத்திற்குட்படுத்த வேண்டும். நமது வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

(“ஏறு தழுவுதல் – ஆதரவு” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டும் போராட்டங்களும்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசியல், சமூக, கலாச்சார உணர்வுகள் சார்ந்து மக்கள் திரள்வதற்கான துவக்கப் புள்ளி என்றால் எனக்கு மகிழ்ச்சியே.அதேவேளை இந்த போராட்டம் அடுத்து வரும் நாட்களில் என்னவாகப் போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(“ஜல்லிக்கட்டும் போராட்டங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் கோமாளி(த.தே. கூ மற்றும் மாகாணசபை) அரசியல்வாதிகளின் கனடாப் பயணத்தால் ஏற்பட்ட பாரிய ஈழ அரசியல் பிளவு.

தை 14ம் திகதி 2017, கனடாவில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இணைநகர(மார்க்கம் & முல்லைத்தீவு) கையப்பம் இடும் விழாவில் கலந்து கொண்ட வடமாகாண முதல்வர் சீவி விக்கினேஸ்வரன் மற்றும் நிர்மலன் கார்த்திஜேசு(Jr சுமந்திரன்) குழுவினரும்.

(“தமிழர்களை ஏமாற்றும் தமிழ் கோமாளி(த.தே. கூ மற்றும் மாகாணசபை) அரசியல்வாதிகளின் கனடாப் பயணத்தால் ஏற்பட்ட பாரிய ஈழ அரசியல் பிளவு.” தொடர்ந்து வாசிக்க…)

இரகசிய ஆவணம் வெளியீடு: பொரிந்து தள்ளினார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் போது, கடந்தாண்டு ஜூலையில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கச் சில நாட்கள் இருப்பதற்கு முன்னர், தனது அடுத்த ஊடகச் சந்திப்பை, நேற்று நடத்தினார்.

(“இரகசிய ஆவணம் வெளியீடு: பொரிந்து தள்ளினார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக சகோதர இனத்தினைச் சேர்ந்தவரை நியமிக்க முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநாகரசபையின் ஆணையாளராக சிறுபான்மையினத்தினைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்படப்போவதாகவும், இதனை ஏற்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(16) திங்கட்கிழமை இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

(“மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக சகோதர இனத்தினைச் சேர்ந்தவரை நியமிக்க முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? அது சொந்தப் பணமா? அல்லது றோ கொடுத்த பணமா?

விடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன் தெரிவித்தாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

(“புலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? அது சொந்தப் பணமா? அல்லது றோ கொடுத்த பணமா?” தொடர்ந்து வாசிக்க…)

ரெலோ இயக்கத்துக்கும் புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டதற்கு முக்கியமானவர் முரளிதான்.

முரளி (கிங்கோ) ஆவரங்காலைச் சேர்ந்தவர். ஐரோப்பாவில் இருந்துவிட்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டர்.. 84ம் ஆண்டு தை மாதம் இவருடைய வீட்டில்தான் பண்டிதர் என்ற புலிகளின் முக்கிய உறுப்பினர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். புலிகள் அப்போது தலைமறைவாக இருந்து தாக்குதல்கள் நடத்திய காலம். முரளி ,திலீபனும் கூட்டங்கள் வைப்பது வழக்கம். உரும்பிராய் மேற்குப்பகுதியில் ஒருநாள் இரவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தப்பகுதி புளொட் இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் இருந்த பகுதி. திலீபனை புளொட் இயக்கத்தினர் கேள்விகள் கேட்டனர்.

(“ரெலோ இயக்கத்துக்கும் புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டதற்கு முக்கியமானவர் முரளிதான்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக் கட்டு

முதன்முதலில் ஜல்லிக்கட்டை நேரில் காணச் சென்றபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட நீதிமன்றத்துக்குப் போன முதல் அனுபவத்துக்கு இணையானது அது. ஊரே கூடி நிற்க, யாரையும் நெருங்க விடாத ஒரு காளையையும், அதன் முன் குதித்து, தன் பார்வையாலேயே அதை மிரட்டி, தனியொருவனாக அடக்கி, மண்டியிடவைக்கும் இளைஞரையும் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒரு ஊர் கூட்டம் அல்ல; பத்து ஊர்க் கூட்டம் கூடி நின்றது. வெவ்வேறு சீருடைகளில் அணிஅணியாக வீரர்கள் நின்றனர். எல்லோர் கவனமும் வாடிவாசல் நோக்கி இருந்தது. ஏகப்பட்ட முஸ்தீபுகளுக்குப் பின், வாடிவாசல் திறக்கப்பட்டபோது காளை சீறி வந்தது. வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். பலர் காளை திரும்பிப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடி ஒதுங்கினார்கள். சிலர் பதுங்கினார்கள். சிலர் மட்டும் விடாது துரத்தினார்கள். காளையின் திமிலைப் பிடித்தவாறே இறுதி வரை ஓடியவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். “சரிண்ணே.. ஜல்லிக்கட்டு எப்போ ஆரம்பிக்கும்?” என்று அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு அண்ணனிடம் கேட்டபோது அவர் என் தலையில் தட்டினார். “சினிமா பார்த்து எல்லாமே நிஜம்னு நம்புறவனாடா நீ!”

(“ஜல்லிக் கட்டு” தொடர்ந்து வாசிக்க…)