சுமந்திரன் கொலை முயற்சி: ஐவருக்கும் மறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று (05) உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

6,176 இலங்கையர் கைது

“சட்ட விரோதமான முறையில், கடல் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள பிரிவினால், கடந்த ஐந்து வருடத்தில் 6,176 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என,

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், கடந்த ஐந்து வருட காலத்துக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமுத்திரப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளை வெகு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

(“6,176 இலங்கையர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார்.

(“கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்” தொடர்ந்து வாசிக்க…)

ரிஷாட் இராஜினாமா?

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

(“ரிஷாட் இராஜினாமா?” தொடர்ந்து வாசிக்க…)

தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??

(சாகரன்)

மாடு திருடியவனுக்கு தண்டனை என்று சும்மா விட்டுவிட்டு போக முடியவில்லை. (கொலை) வெறிபிடித்து தண்டனை வழங்குவதற்குரிய அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார். தண்டனை என்பது ஒருவன் தெளிந்து, திருந்தி, மனிதனாக வாழ்வதற்கே ஒழிய மாறாக அவனை அழித்தொழப்பதற்காக அல்ல. துன்புறுத்தலில் ஈடுபடுவதும் ஒருவகை குற்றம்தான்;. இந்த தவற்றிற்கான தண்டனை ஏற்க யார் முன் வருவார்கள். தவறு செய்வதற்காக சமூகக் காரணிகள் என்ன என்பது ஆராயப்பட்டு இந்த சமூகக் காரணிகள் களையப்பட்டு இதன் அடிப்படையில் அறிவூட்டப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒரு நல்ல பிரஜையாக வாழ வழிவகை செய்யும் அணுகு முறையே தவறுகளை களைவதற்குரிய சரியான செயற்பாடு ஆகும்.

(“தனி ஒருவனின் தவறும்..? தலைவனின் தவறும்..??” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்

(Kiri Shanth)
அண்மையில் சகோதரி ஒருவரின் கலங்கடிக்கும் கண்ணீர் கொட்ட வைக்கும் வாய் மூடவைக்கும் அதிர்ச்சியளிக்கும் புல்லரிக்கும் வெறி கொள்ள வைக்கும் பேச்சைக் கேட்க வேண்டி நேர்ந்தது. அதற்கு காரணம் அள்ளுக்கொள்ளையாக ஈழத்தமிழர்கள் என்றாலே கண்ணீர் வடிக்கும் கும்பலும் அதை வைத்து காசு பார்க்கும் கும்பலும் , இன்னும் சில அப்பாவி நண்பர்களும் அந்தப் பேச்சை தாறு மாறாக பகிர்ந்துகொண்டிருந்தமை தான்.

(“ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றுப் பதிவுகள்:

மரணத்தை கொண்டாடும் மனநிலையை தவிர்ப்போம்! மனித நேயத்தை வளர்போம்!!

(சாகரன்)

கடந்த வாரம் கந்தன் கருணைப் படுகொலை பற்றிய பதிவொன்றை மேற்கொண்டிருந்தேன். இதற்கு கிடைத்த ஆதரவு எதிர்வினைகள் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டியிருக்கின்றது. ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான முரண்பாடு நட்பு முரண்பாடே ஒழிய பகை முரண்பாடு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதனாலேயே சகோதரப்படுகொலைக்கு எதிரான பாசறையில் தொடர்ந்து பொது வெளியில் வேலை செய்து வருகின்றேன். இதனை இன்றும், இன்னமும் இறுகப் பற்றி வருகின்றேன் ஒரு மனிதனின் உயிர் வாழ்தல் என்ற மனிதாபிமான எதிர்பார்பை பகைவர் புலத்திலும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தை 40 வருடங்களுக்கு முன்பு மக்களின் வடுதலைக்காக புறப்பட்ட நாட்களிலேயே எனக்குள் வளர்த்துக் கொண்டேன். இது நான் நம்பும், கைகொள்ளும் இடதுசாரி சிந்தனையில் இருந்து உருவானது.

(“வரலாற்றுப் பதிவுகள்:” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

(“‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

ரயில், பஸ் மறியல் போராட்டமும் நடத்த முடிவு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) உள்ளிட்ட கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

(“விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு” தொடர்ந்து வாசிக்க…)