இன்னும் விலகாத மர்மம்

இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா – நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.

இலங்கையின் ஆளும் வர்க்கம்

(Subamangala Saththiyamoorthy)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை உட்பட அவருக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை தொடர்வது என ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவின் அரசாங்கமும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

‘ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகர்த்த நாள்’

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

இன்று,யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் ‘ஹிட்லரின் யூத இனஅழிப்பு’ ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.

உலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சில பழக்க வழக்கங்கள், முறைமைகள் போன்றவற்றில் இருந்து மாற்றமடையாமல், மீட்சிக்கு வழி இல்லை. இலகுவில் மாற்றங்களுக்கு உள்ளாக, மனித மனம் தயாராக இருப்பதில்லை. இதன் பாதகமான விளைவுகள் எல்லாவற்றையும் அது, தொடர்ந்து அனுபவித்து வருகிறது.

சுலைமானி படுகொலையின் வழி ஈரான் ஜனநாயகத்துக்கு ட்ரம்ப் இழைத்த கேடு என்ன?

(ஸ்டான்லி ஜானி)

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியமான ராணுவத் தலைவர் காசிம் சுலைமானியின் மரணம், அந்நாட்டு அரசுக்கு மிகப் பெரிய இழப்பு. மேற்காசியா முழுவதற்கும் ஈரானின் அதிகாரம் பரவுவதற்கான வழியைக் கண்டுபிடித்ததல்லாமல் அதை பரவச் செய்தவர் அவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிப் படையின் மூலம் உளவு வேலையையும் புறப்பாதுகாப்பையும் அவர் நிர்வகித்துவந்தார். பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே ஜனவரி 3-ல் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்

(வி. சபேசன்)
·
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறாள். இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்கின்ற ஆத்திரத்தில் கணவனே கொலை செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை பல ஈழத்து சங்கிகள் ஆதரித்து எழுதிக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

ஹிருணிகாவின் பேச்சு ……. (தமிழில்)

(Jeevan Prasad)

இன்றைய பாராளுமன்ற விவாதம் குறித்து நான் பேசப் போவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய திரை நாடகமான பிரிசின் பிரேக் 2 ( சிறை உடைப்பு 2 ) குறித்தே பேசப் போகிறேன். ஒரு சகோதரன் , சிறையிலுள்ள இன்னொரு சகோதரனை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக சில ஒளி நாடாக்களை களத்தில் இறக்கியுள்ளார்.

‘கொரோனா’ வைரஸ் பரவலாமென சீனா எச்சரிக்கை

சீனாவில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸ், தொடர்ந்தும் பரவக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக, அந்நாட்டுச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த வைரஸ் தொடர்பில் இலங்கையிலும் விசேட சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கைச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

ஓமான் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியை ஒடுக்கிய ச‌ர்வாதிகாரி க‌பூஸ் ம‌ரணம் குறித்து….

(Kalai Marx)
ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் 50 வ‌ருட‌ங்க‌ள் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌பூஸ் ம‌றைவு குறித்து ஊட‌க‌ங்க‌ள் இர‌ங்க‌ல்பா பாடி ஓய்ந்து விட்ட‌ன‌. அநேக‌மாக‌ எல்லா ஊட‌க‌ங்க‌ளும் அவ‌ரைப் ப‌ற்றி ந‌ல்ல‌தாக‌வே சொல்லி புக‌ழார‌ம் சூட்டின‌. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் ச‌ர்வாதிகாரி என்ற‌ சொல்லை பாவிக்க‌வில்லை. ஏனென்றால் க‌பூஸ் மேற்க‌த்திய‌ நாடுகளுக்கு விசுவாச‌மான‌ அரசிய‌ல் த‌லைவ‌ர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.