பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய சில்வா, எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் கூறினார்.