ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக ஒலித்த குரல்

சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர், சிறந்த பிக்குவாகவும் நேர்மையும் கொள்கைப்பற்றும் மிக்க அரசியல்வாதியாகவும் சுயநலமற்ற, சமூகச் செயற்பாட்டாளராகவும், புத்தரின் போதனைகளை மனச்சாட்சிக்கு விரோதமின்றிக் கடைப்பிடித்த முன்னுதாரண புருஷராகவும் வாழ்ந்து காட்டினார். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டடோர் போன்றோரின் நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்த இவரது முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்படவேண்டியது ஆகும்.