தடுப்பூசி அரசியல்: முதியோர்கள் புறக்கணிப்பு

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மே மாதம் 21ஆம் திகதி, கொவிட்- 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது, ஜூன் மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்துக்குள், மே 25, 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆயினும், மே மாதம் 25 ஆம் திகதி, பொது மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்கள் என்று, மே 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது.