ஒரு மருத்துவரின் குரல்…

(Roshan Anthonypillai)

18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Covid19 Specialized Treatment Hospital இற்கு பணியாற்ற செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தேவை உணர்ந்து மனதின் ஆழத்தில் சிறு பயத்துடன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு கடமையாற்ற செல்லுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தேன்.