சமூக முன்னேற்றத்திற்கும் மனித குல விடுதலைக்கும் தம்மை அர்பணித்தவர்களை நினைவில் நிறுத்துவோம்.

(சாகரன்)

சமூக நீதி…. சுயமரியாதை…. பகுத்தறிவு… பெண்விடுதலை…. சாதி ஒழிப்பு… என்ற பலதையும் கையில் எடுத்த பெரியார். இன்று தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் சமூக வளர்ச்சியை நோக்கிய பணயத்திற்கு வித்திட்டவர். இவரின் போராட்டங்களை மறுத்தவர்கள் தமிழ் நாட்டில் பொதுவாழ்வில் இருக்க முடியாது என்றளவிற்கு தனது போராட்ங்களுக்கான நியாதிக்கங்களை நிறுவிச் சென்றவர் அவரின் பிறந்த மாதத்தை நாம் கடந்து வந்துள்ளோம்… அது செப்ரெம்பர் மாதம்.