சர்வதேச நாணய நிதியம் இலங்கையை காப்பாற்றுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கைக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் கொடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளப்பட்ட அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கு, அந்நிதியத்தின் நிறைவேற்றுச் சபை திங்கட்கிழமை (20) ஒப்புதல் வழங்கியுள்ளது.