சாதி,இனம்,மதம்,மொழி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருகோணமலை சேருநுவர என்னும் இடத்தில் உள்ள ஒரு பாடசாலையில் சிங்கள சிறுமி சப்பாத்து இல்லாத காரணத்தால் செருப்பு அணிந்து சென்றதால் அந்த செருப்புகளை அந்த மாணவியின் கழுத்தில் தொங்க வைத்தார் ஒரு ஆசிரியை.- சிங்களம்
அண்மையில் கிளிநொச்சியில் சப்பாத்து அணிந்துவராத மாணவர்களின் செருப்புகளை வாங்கி வெளியிலே குவித்து வைத்தார் ஒரு அதிபர்.இன்னொரு அதிபர் செருப்புகளையே எரித்தாராம் செய்தி.- தமிழ்

ஓட்டமாவடியில் ஒரு விழா கொண்டாட்டத்துக்காக புதிய ரக ரை ஒன்றை தயார் செய்து நிதிசேகரிப்பு என்னும் பெயரில் அதிக விலை நிர்ணயித்து அதை வாங்கும்படி நிர்பந்தித்தார் ஒரு அதிபர்- முஸ்லிம்

சாதி,இனம்,மதம், மொழி என முரண்படுகிறோம்.நமது பிரச்சினைகளுக்கு இவைகளா காரணம்.இல்லை வர்க்க சிந்தனைகளே காரணம்.அந்த ஏழை மாணவர்களுக்கு சப்பாத்து வாங்க வசதியில்அலை ரை வாங்க பணம் இல்லை என்றபோது அதற்குரிய வசதிகளை ஒழுங்குபடுத்த இந்த மூன்று சமூகங்களிலும் எந்த ஆசிரியர்அதிபரகளுக்கு தெரியவில்லை.

சாதி,இனம்,மதம்,மொழி எல்லாம் புறந்தள்ளப்பட்டு நிற்கின்றன.வர்க்க ரீதியான பாதுகாப்புக்கு கேடயமாக இந்த பேதங்கள் துணை நிற்கின்றன.சாதிக்காக,இனத்துக்காக,மதத்துக்காக,மொழிக்காக வாதாடுகின்ற சுயநலவாதிகள் கண்களுக்கு இந்தப் பிரச்சினைகள் கண்களுக்கு தெரியவில்லை.இதற்கு எந்த சாதி அமைப்பை,இனத்தை,மதத்தை,மொழியை குற்றம் கூறுவது.

ஏழைகளுக்கு சாதி,மதம்,இனம்,மொழி பிரிவினைவாதங்கள்,பிரிவினைவாதிகள் உதவப்போவது இல்லை.தயவு செய்து இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நாங்களும் இந்த மாதிரியான தடைகளை கடந்தே வளர்ந்தவர்கள் .

(Vijaya Baskaran)