சிங்களப் பெருந்தேசியவாத எழுச்சியில் துரோகியானார் தியாகி

(இலட்சுமணன்)

சிங்களப் பெருந்தேசியவாத எழுச்சியில், சிங்களத் தேசியவாதத் தேசப்பற்று சுருண்டு போயுள்ளது. தேசிய எழுச்சியும் தேசியச் சிந்தனையும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல; அது சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும், உலகில் வாழும் மனித இனக்குழுக்களுக்கும் இயல்பாய் உள்ள உணர்வாகும்.