ஜெகனின் விஸ்வரூபம்: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆவாரா? தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண்

பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு: கோப்புப்படம்

(போத்திராஜ்)

ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்த, அரசியல் களத்தில் அவரின் முதல்வர் கனவுக்கு கடும் போட்டியாக ஒய் எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி வளர்ந்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ஆந்திராவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண் எழுச்சி பெற்று வருகிறார். இந்த 3 பேருக்கும் இடையில்தான் ஆந்திராவில் நடக்கும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் போட்டி இருக்கும்.