9 பாடங்களிலும் 9,413 பேருக்கு A சித்தி; முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூல மாணவர்கள் இல்லை

2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தால், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன. இம்முறைப் பரீட்சையில், 9 ஆயிரத்து 413 பேர், ஒன்பது பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுள்ளதாக, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும், முதல் 10 இடங்களில், தமிழ் மொழிமூலம் தோற்றிய மாணவர்கள் இடம்பெறவில்லை.