ஜெனீவா வாக்குறுதிகளும் உள்நாட்டு மறுப்புகளும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தம்மைப் பதவியில் அமர்த்தும் மக்களையாவது ஏமாற்றக் கூடாது. ஆனால், அவர்கள் ஏமாற்றுகிறார்கள். மக்களில் பெரும்பாலானவர்கள் அரசியல், பொருளியல் போன்ற விடயங்களைப் படிக்காதவர்கள். படித்தவர்களும்கூட, அரசியல்வாதிகள் எதைக் கூறினாலும் சுயநலத்துக்காக ‘ஆமாம் சாமி’ போடுகிறார்கள் அல்லது, எதையும் எதிர்க்கிறார்கள். எனவே, அரசியல்வாதிகள் இலகுவில் மக்களை ஏமாற்றலாம்.