நிபுணர்களும் தடுமாறும் நிலை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

சிலவேளைகளில் வரலாறு விசித்திரமானது; சிலவேளைகளில் விந்தையானது. 2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி பதவிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் அவரது அரசாங்கமும், இன்று அதே தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை விந்தையானது.