மக்கள் நாயகனும் கைக்கூலியும்

– எஸ்.பி.ராஜேந்திரன்
35 வயதே நிரம்பிய அந்த ரகசிய மனிதன், யாருக்கும் தெரியாமல் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான். இரண்டு வாரம் அவனுக்கு அவகாசம் தரப்படுகிறது. அவனும் உறுதியளிக்கிறான். என்ன உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவன்’ பதவியிலிருக்கக் கூடாது என உத்தரவிடுகிறார்கள். உன்னை ஜனாதிபதியாக்குகிறோம் என்கிறார்கள். வாயெல்லாம் பல்லாக, கெக்கெலி கொட்டிச் சிரித்தவாறு கை கொடுத்து விடைபெறுகிறான்.