முஸ்லிம்கள் மீதான கறையும் பேராயரின் உரையும்

(மொஹமட் பாதுஷா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது, கட்டம்கட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னால், பெரியதோர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் சதித்திட்டமும் இருக்கலாம் என்று, ஆரம்பத்தில் துளிர்விட்ட சந்தேகம், இப்போது வலுவடைந்து இருக்கின்றது.