எதிர்பார்க்கப்படும் அரசியல் நேர்மை

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கொண்ட இந்தியாவுக்கான முதல் வெளிநாட்டு விஜயத்தில் ஆராயப்படாத விடயமாக இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல், 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவைகள் அன்றைய வேளையில் விமர்சிக்க பட்டிருந்தன. ஆனால், அது அலட்டிக் கொள்ளப்படவில்லை.