அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தவிர்க்கவியலாதது

(பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்)

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவைகளைச் சேர்ந்த, அதிபர்களதும் ஆசிரியர்களதும் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெரேரா ஆணைக்குழுவின் சம்பள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட, ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.