(பூன்ட்ஷோ வாங்யெல் , இலங்கைக்கான ஐ. நா சனத்தொகை நிதியத்தின் தற்காலிகப் பிரதிநிதி.)
சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து, தற்போது நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ‘மேல்-நடுத்தர வருமானம்’ (Upper-middle-income) கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
