எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7)


(அ. வரதராஜா பெருமாள்)

ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூ

உள்ளே நிறைந்திருப்பது ஈரும் பேனும்.

இலங்கையின் பொருளாதாரத்தை தென்னாசியாவிலேயே சிறந்த பொருளாதாரம் என இன்னமும் வெளிநாடுகளின் பொருளியலாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்களும் அப்படியே பெருமையாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இலங்கையின் பொருளாதாரம் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் காத்திரமான வலிமைகளாடு இருக்கின்றதா அல்லது மாறாக இங்கு பொருளாதாரத்தின் பிரதான கூறுகளெல்லாம் புற்று நோய்க் குறிகளோடு உள்ளனவா என்பதே கேள்வியாகும்.