‘காடுகளை….மரங்களைக் காப்போம்…’

(Rathan Chandrasekar)

‘காடுகளை….
மரங்களைக் காப்போம்…’
என்று இந்தியத்தின்
எந்த மூலையிலிருந்தும்
எவராகிலும்
கடமைக் குரல் எழுப்பினாலும் ….
அதில் கலந்திருக்கும்
இவரது உயிர் மூச்சு !
பத்மஸ்ரீ – பத்மபூஷண்
சுந்தர்லால் பகுகுணா !