காலத்தை வென்றவர்கள்!

ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர்.