திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பாக கேரள சட்ட மந்திரி பி.ராஜீவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
