வன்னி அரசு அமைச்சரே….!

பட்டியல் இனத்தினரை பொதுத்தொகுதியில் நிறுத்தியதாக பச்சாதாபத்தோடு சொல்கிறீர்கள் என எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். பதில் சொல்லும் இடத்திற்கு போய் விட்டோம் என்பது உங்களுக்கு மறந்து விட்டது போலும். பரவாயில்லை.

பட்டியல் சமூகத்தினரை பொதுச்சமூகத்தில் நிறுத்தியதை நாங்களா பேசத்தொடங்கினோம்?. பொதுத்தொகுதியில் 23 பட்டியல் சமூகத்தினரை நிறுத்தினோம் என உங்கள் புதுக்கூட்டணிக் கட்சி, புளுகுணிக் கட்சி பொய் பரப்பியதே? அதைக் கண்டித்தீர்களா?

இப்படி பொய்யைப் பரப்பினால் பட்டியல் சமூகத்தினர் ஏமாந்து விடுவார்கள் என ஏளனமாக நினைக்கிறீர்களா என அவர்களைப் பார்த்து கேட்டீர்களா?

நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் அது உங்கள் கூட்டணி தர்மம். இப்போது இருக்கும் கூட்டணிக்காவது உண்மையாக இருக்கலாம் என முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால் வாழ்த்துகள்.
அதற்காக எங்கள் மீது அவதூறு செய்தால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?

நான்கு பேர் கடந்து முறை இருந்தோம் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்கிறீர்கள். ஆட்சியில் பங்கு தருகிறோம் என நாங்கள் எப்போது சொன்னோம்? அதை ஏற்றுக் கொண்டுதானே கூட்டணியில் இருந்தீர்கள்.
2021ஐ விட இரண்டு இடங்கள் அதிகமாக 2026ல் வாங்கிப் போட்டியிட்டீர்களே அப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று சொல்லவில்லையே? ஒப்புக் கொண்டுதானே திண்டிவனம் தொகுதியில் நின்றீர்கள். கழகத்தின் கொடிநிறத்தில், தேர்தல் விளம்பரம் கொடுத்தீர்களே அப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்றுதான் சொன்னோம்.

ஆட்சியில் பங்கு தர மறுக்கிறீர்கள் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என அப்போதே சொல்லியிருக்கலாமே? உங்களுக்காக எங்கள் கட்சித் தொண்டன் சிந்திய இரத்தம் மிஞ்சியிருக்குமே.

இப்போது நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் புளுகுணி கட்சியின் தலைவர் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று கடை விரித்தாரே அப்போதே போயிருக்கலாமே? அதைச்செய்யாமல், அப்போது அவரைக் கோழை என்று விமர்சித்தது நீங்கள்தானே?

இப்போது அவருக்கு தேவைப்பட்டது என்பதால், உங்களை அமைச்சராக்கி விட்டார். அதற்காக எங்கள் மீது பழி போடுவது பச்சோந்தித்தனம் இல்லையா?

நீங்கள் கேட்டதற்கு அவையிலேயே பதில் வந்தது. நான் கேட்பதற்கு பதில் சொல்ல முடியுமா உங்களால்?

பாஜக, மோடி என்று நீங்கள் பேசத்தொடங்கினாலே சபாநாயகரும் உங்கள் பழைய கட்சி நண்பர் ஆதவ் அர்ஜுனா பதறித் தடுக்கிறார்களே அது ஏன்?

வேங்கைவயல் விவகாரத்தில்
எங்கள் அரசை குற்றம் சொன்னீர்கள். காவல்துறை பொய் சொல்கிறது என்றீர்கள். உங்கள் ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்து விட்டது. அதனை ஏன் இன்னும் அம்பலப்படுத்தவில்லை.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது கழகத்தின் நிலைப்பாடு. நாங்கள் அதில் உறுதிப்பாட்டோடு இருக்கிறோம்.

கோயில்களில் பிராமணர்கள்தான் பூஜை செய்ய வேண்டுமென உங்கள் சகா சங்கி அமைச்சர் சொன்னாரே அந்த நிலைப்பாடு என்னவானது?
அப்புறம் ஒரு படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ்லாம் இருந்தா ஒன்னு கண்டிப்பா Anti-Climaxஆ தான் இருக்கும். அப்டி இருந்தா உங்கள் 100 நாள் ஆட்சி படம் மாதிரி அதுவும் Flop ஆயிடும்.

  • முனைவர். ஹஃபீசுல்லா.

Leave a Reply